12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' |
கே.பாக்யராஜின் சித்து ப்ளஸ்-2 படத்தில் நடித்தவர் சாந்தினி. அதையடுத்து நான் ராஜாவாகப்போகிறேன், வில் அம்பு, நையப்புடை போன்ற படங்களில் நடித்தவர் இப்போது தமிழில் என்னோடு விளையாடு, தாமி உள்பட அரை டஜன் படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இவை முன்னணி ஹீரோக்களின் படங்கள் இல்லை என்றபோதும் முக்கிய கதாநாயகியாக இந்த படங்களில் நடித்து வருகிறார் சாந்தினி.
இதுபற்றி அவர் கூறுகையில், 2010ல் சினிமாவுக்கு வந்த எனக்கு அதன்பிறகு எதிர்பார்த்தபடி படங்கள் கிடைக்கவில்லை. ஆனாலும் தெலுங்கில் சில படங்களில் நடித்து வந்த நான் பின்னர் மீண்டும் தமிழுக்கு வந்தேன். அந்த வகையில், இந்த 2016ம் ஆண்டு மட்டும் என் கைவசம் 9 படங்கள் உள்ளன. அந்த வகையில், இந்த ஆண்டு சினிமாவில் எனக்கு சிறப்பான ஆண்டாகும். மேலும், இப்போது அதிகமாக வளர்ந்துவரும் ஹீரோக்களின் படங்களில் நடித்தபோதும், கூடிய சீக்கிரமே முன்னணி நடிகர்களின படவாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
அதோடு, நான் கிளாமர் விசயத்தில் தடையாக இருப்பதாக ஒரு செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. ஆனால், நான் கிளாமராக நடிக்க ஒருபோதும் மறுத்ததில்லை. ஆபாசமாக நடிக்க மட்டுமே மறுத்து வருகிறேன். இதற்கு முக்கிய காரணம் எனது முகம் மற்றும் உடலமைப்பு குடும்பப்பாங்கான வேடங்களுக்குத்தான் பொருத்தமாக இருக்கும். அந்த வகையில், கண்ணியமான கவர்ச்சியை காட்டி நடிக்க ஒருபோதும் நான் மறுத்ததில்லை என்று தன்னைப்பற்றி கோலிவுட்டில் பரவிக்கொண்டிருக்கும் செய்திக்கு பதில் கொடுக்கிறார் சாந்தினி.