'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
கிட்டத்தட்ட இதை ஒரு பதிலடி என்றே சொல்லலாம். ஆம்.. மறைந்த மலையாள நடிகர் கலாபவன் மணியின் வாழ்க்கையை படமாக எடுக்க இருக்கிறாராம் இயக்குனர் வினயன். இதன் மூலம் மலையாள முன்னணி நடிகர்கள் பலருக்கும் தக்க பதிலடி தரும் அவரது நோக்கமும் நிறைவேறும் என்று சொல்கிறார்கள்.. கலாபவன் மணியின் திறமையை உலகுக்கு அறிமுகப்படுத்தியதில் இயக்குனர் வினயனின் பங்கு மிக முக்கியமானது. மற்ற எந்த இயக்குனரை விடவும், இவர் மட்டுமே கலாபவன் மணியை வைத்து 13 படங்கள் இயக்கியுள்ளார். வசந்தியும் லட்சுமியும் பின்னே ஞானும், ராட்சஸ ராஜாவு, கருமாடி குட்டன் என இவரது படங்களில் தான் கலாபவன் மணிக்கு தனது நடிப்பு பசியை போக்கிக்கொள்ளும் கதாபாத்திரங்கள் கிடைத்தன.
அப்படிப்பட்ட தன்னை கடந்த வாரத்தில் கலாபவன் மணிக்கு நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்காமல் புறக்கணித்ததில் சில முன்னணி நடிகர்களுக்கு பங்கு உண்டு என வினயன் கடுயமையாக குற்றம் சாட்டியிருந்தார்.. தற்போது கலாபவன் மணியின் வாழ்க்கையை படமாக எடுத்து தனது சிஷ்யனை கௌரவப்படுத்தும் அதே நேரத்தில் அவர்களுக்கு பதிலடி கொடுக்கவும் திட்டம் வைத்துள்ளாராம்., இப்போது கலாபவன் மணி மீது பாசத்தை பொழியும் இந்த முன்னணி நடிகர்கள், உண்மையில் அவரை ஆரம்ப காலத்தில் எவ்வாறு நடத்தினார்கள் என்கிற விஷயத்தையும் காட்சிப்படுத்துவார் என்பதால் இப்போதே பரபரப்புக்கு திரி கொளுத்திவிட்டார் இயக்குனர் வினயன்.