பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கலாபவன் மணியின் மர்ம மரணம் குறித்த விசாரணை கிட்டத்தட்ட கிளைமாக்ஸை நெருங்கிக்கொண்டு இருக்கிறது. கிணறு தொண்ட பூதம் கிளம்பியது போல தினசரி ஒரு செய்தியாக வெளியாகி அதிர்ச்சி மேல அதிர்ச்சி அளித்து வருகிறது. கலாபவன் மணியின் மரணத்திற்கு காரணம் அவரது உடலில் மதுவுடன் கலந்திருந்த பூச்சிமருந்து என்று மருத்துவ அறிக்கை சொல்கிறது. அதேசமயம் கலாபவன் மணியின் மாமனார் கடையில் பூச்சி மருந்து வாங்கினார் என்கிற விஷயம் வெளியாகி போலீஸார் அவரிடம் விசாரித்து வருகிறார்கள்.
கலபாவன் மணி வலி நிவாரணியாக ஒரு மருந்தை அடிக்கடி உடலில் செலுத்திக்கொண்டதாகவும் இதற்கு இடுக்கியை சேர்ந்த லேடி டாக்டர் ஒருவர் உதவியாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. நாளடைவில் இது அந்த லேடி டாக்டருடன் கலாபவன் மணிக்கு நெருக்கத்தை ஏற்படுத்தியதாகவும் இதனால் மணிக்கும் அவரது மனைவி நிம்மிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் இதை அறிந்த மணியின் மாமனார் சுதாகரன் பலமுறை மணியை எச்சரித்து கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல மணியின் இந்த டாக்டர் நட்புக்கு ஆதரவாக இருந்த மணியின் நண்பர்களையும் மணியின் மாமனார் கண்டித்தார் என்றும் சொல்லப்படுகிறது. அந்தவகையில் இது கிட்டத்தட்ட கொலையாக கூட இருக்கலாம் என்கிற முடிவுக்கு போலீஸார் வந்துள்ளதாகவும் தெரிகிறது.
இது ஒரு அதிர்ச்சி என்றால் இன்னொருபக்கம் கொச்சியை சேர்ந்த ஒரு மோஸ்ட் வான்ட்டட் ரவுடி ஒருவனுடன் மிகுந்த நட்பில் கலாபவன் மணி இருந்ததாகவும் மணியின் பெஸ்ட் பிரண்ட் என அந்த ரவுடி அழைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி இன்னொரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவனுடன் இணைந்து கலாபவன் மணி சில சமூக குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.. அதனால் கலாபவன் மணிக்கு அந்தவிதமாகவும் எதிரிகள் இருக்க வாய்ப்பு இருக்கலாம் என்றும் கூட சொல்லப்படுகிறது.. இந்த இரண்டு கோணங்களில் ஏதோ ஒருவகையில் இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வரும் என்றும் போலீஸ் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.