தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழில், 'ஐயா' படத்தில் குடும்பப்பாங்காக அறிமுகமான நயன்தாரா, அதையடுத்து சந்திரமுகி, கஜினி, சிவகாசி, வல்லவன், ஈ, சிவாஜி வரை கவர்ச்சியில் ஓரளவு அடக்கி வாசித்து வந்தார். ஆனால் அஜீத்துடன் நடித்த பில்லா படத்தில் பிகினி உடையணிந்து கவர்ச்சி பிரளயமாய் மாறினார். இதனால் தமிழக ரசிகர்களின் கனவுக்கன்னியானார் நயன்தாரா. அதன்பிறகு அவர் பிகினி உடையணிந்து நடிக்கவில்லை. அதிலும் சமீபகாலமாக கதையின் நாயகியாகி விட்டதால் கிளாமர் பக்கமே அவர் செல்வதில்லை.
இந்த நிலையில், கத்தி தெலுங்கு ரீமேக்கில் நயன்தாரா நடிப்பதாகவும், அந்த படத்தில் மறுபடியும் அவர் பிகினி உடைக்கு மாறுவதாகவும் மீடியாக்களில் செய்திகள் உலவிக்கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த செய்தியை மறுக்கிறார் நயன்தாரா. மறுபடியும் பிகினிக்கு மாற நான் விரும்பவில்லை. அதோடு, யாரும் என்னிடம் அப்படி நடிக்க கேட்டுக்கொண்டதுமில்லை. மேலும், ஆரம்பத்தில் நான் அப்படி நடித்தேன். இனிமேல் அப்படி நடிக்கப்போவதில்லை. காரணம், கவர்ச்சியை உடம்பைக்காட்டி வெளிப்படுத்துவதை விட கண்களில்தான் சிறப்பாக வெளிப்படுத்த முடியும் என்பதை இப்போது நான் தெரிந்து கொண்டேன். என்னதான் உடம்பை காட்டினாலும், கண்களில் அதை பிரதிபலிக்கும்போதுதான் அந்த கவர்ச்சியில் ஈர்ப்பு இருக்கும். அதனால் மறுபடியும் நான் பிகினிக்கு மாறுகிறேன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்கிறார் நயன்தாரா.