பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
சமீபத்தில் மறைந்த மலையாள நடிகர் கலாபவன் மணியின் மரணம் இயற்கையானதல்ல, அவரது உடலில் நஞ்சு கலந்துள்ளது என போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் தெளிவாக சொல்லிவிட்டது. போலீசாரும் தங்கள் பங்கிற்கு, மரணம் நிகழ்ந்த இடத்தில் தடயங்களை அளித்தார்கள் என கலாபவன் மணியின் அவுட் ஹவுஸில் வேலைசெய்த மூன்று பேரை கைது செய்துள்ளது.
இதுதவிர கலாபவன் மணியின் மரணம் நிகழ்ந்த நாள் தொட்டே கடைசியாக மணியுடன் மது அருந்தியதாக நகைச்சுவை நாடிகர் ஜாபர் இடுக்கி மற்றும் வில்லன் நடிகர் சாபுமோன் ஆகியோர் மீது சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தியது. விசரானையில் இந்த இரண்டுபேரும் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கருத்தாக முரண்பட்ட தகவல்களையே சொல்லி வருகிறார்கள்.
முதலில் தாங்கள் அந்த இடத்திலேயே இல்லை என்றார்கள். பின்னர் அங்கே இருந்தோம் ஆனால் மது அருந்தவில்லை என்றார்கள். இதில் ஜாபர் இடுக்கியை தனியாக விசாரித்தபோது சாபுமோன் மது அருந்தவில்லை என்றார். இப்போது சாபுமோன் ஒரு பேட்டியின்போது மணியுடன் சேர்ந்து தான் மது அருந்தியதாகவும் ஒரு பிரபல ஹோட்டலில் இருந்து அதை வரவழைத்ததாகவும் கூறியுள்ளார். ஆனால் இந்த இரண்டு பேருமே கலாபவன் மணியின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளவில்லை என்பது தான் இவர்கள் மீதான சந்தேகத்தை இன்னும் அதிகப்படுத்துகிறது. ஆனால் அவர்களோ, மணியின் இறப்பை தாங்க முடியாததால் தான் இறுதிச்சடங்குகளில் கலந்து கொள்ளவில்லை என கூறியுள்ளார்கள்.. பார்ப்போம்.. இன்னும் என்னென்ன சொல்கிறார்கள் என்று.