டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நிச்சயமாக ஜீத்து ஜோசப் தற்சமயம் பிஸியாகத்தான் இயங்கி கொண்டிருக்கிறார்.. ஆம்.. பிருத்விராஜை வைத்து 'ஊழம்' என்கிற படத்தை இயக்கிவருகிறார். 'மெமொரீஸ்' என்கிற ஹிட் படத்திற்கு பிறகு பிருத்விராஜுடன் இணைந்து பணியாற்றும் இந்தப்படம் பழிவாங்குவது தொடர்பான கதையாம்.. இதற்கான வேலைகளில் இருக்கும்போது பிஜூமேனன் - இந்திரஜித் இருவரும் நடிக்கும் படத்திற்கு கதை எழுத அவருக்கு நேரம் இருக்கிறதா..? அப்படியே இருந்தாலும் யாருக்காக ஒப்புக்கொண்டார் என்பது அவரது நட்பு வட்டாரத்திலேயே மிகப்பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது..
வேறு யாருக்காகவும் இல்லை.. அவரது நண்பரான அன்சார் கான் என்பவருக்கத்தான் இந்த கதையை எழுதிகிறார்.. அறிமுக இயக்குனராக களம் இறங்கும் அன்சார் கான் ஏற்கனவே இயக்குனர்கள் விஜிதம்பி மற்றும் பிளஸ்சி ஆகியோரிடம் உதவியாளராக வேலைபார்த்தவர்தான். இவரிடம் பிஜூ மேனன் மற்றும் இந்திரஜித் ஆகியோரின் கால்ஷீட் கிடைக்கவே, தான் ஏற்கனவே இயக்கிய குறும்படமான 'முகமுகம்' கதையை ஜீத்துவிடம் கொடுத்து, அதை படத்திற்கான கதையாக மாற்றித்தரும்படி சொல்லியிருக்கிறார்.. கேரளாவில் வண்டிப்பெரியார் அறுகில் உள்ள பீர்மேடு பகுதியில் இருந்து எர்ணாகுளத்திற்கு காட்டுப்பாதை வழியாக தப்பிக்கும் இரண்டு குற்றவாளிகளை பற்றிய கதைதான் இது. நண்பர் என்பதால் ஜீத்து ஜோசப்பும் எழுதித்தர சம்மதித்து விட்டாராம்.