‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
விஜய்யின் கத்தி, அஜீத்தின் வேதாளம் படங்கள் அனிருத்தின் மார்க்கெட்டை உச்சத்துக்கு கொண்டு சென்றது. ஆனால் அந்த சமயத்தில் வெளியான பீப் பாடல் சர்ச்சை அவரது மார்க்கெட்டை சரித்து விட்டதாக கூறப்பட்டபோதும், இப்போதும் அவர் விக்ரம், சிவகார்த்திகேயன் என முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு பிசியாக இசையமைத்துக் கொண்டுதான் இருக்கிறார். அதேபோல் வழக்கம்போல் மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் பின்னணியும் பாடி வரு கிறார் அனிருத்.
இந்த நிலையில், உலக வெப்ப மயமாகி வருவதைத் தொடர்ந்து உலகம் முழுக்க ஆண்டுதோறும் மார்ச் மாதம் 19-ந்தேதி ஒரு மணி நேரம் மின் விளக்குகளை அணைத்து எர்த் ஹவர் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்காரணமாக நேற் றைய தினம் இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை தனது வீடு மற்றும் இசைக்கூடாரத்தில் அனைத்து லைட்டுகளையும் ஆப் செய்து விட்டு ஒரு மணி நேரம் எர்த் ஹவர் கடைபிடித்திருக்கிறார் அனிருத்.
முன்னதாக, நேற்று தனது டுவிட்டரில், எர்த் ஹவரை என்னுடன் சேர்ந்து அனைவரும் கடைபிடியுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார் அனிருத். அவரது இந்த சமூக நோக்கத்துக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.