‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்துள்ள தெறி படத்தின் பாடல்கள் இன்று ( மார்ச் 20ம் தேதி) மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள 50வது படம் தெறி. இப்படத்தின் பாடல்களை ரசிகர்கள் இப்போதே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
விஜய் படம் என்றாலே பாடல்கள் நன்றாக இருக்கும் என்பது வழக்கமான ஒன்றுதான். ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைத்த பாடல்கள் ஒவ்வொன்றையும் விஜய்க்கு போட்டுக் காட்டி அவர் சம்மதம் தெரிவித்த பிறகே இயக்குனரும் அதை ஏற்றுக் கொண்டுள்ளார்.
தெறி படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற உள்ளது. இந்த இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த படத்தின் தயாரிப்பாளர் தாணு திட்டமிட்டுள்ளார். ரஜினிகாந்த் நடிக்கும் கபாலி படத்தையும் அவர் தயாரிப்பதால் தெறி படத்தின் இசை வெளியீட்டிற்கு ரஜினிகாந்த் தான் தலைமை தாங்குகிறார் முன்னர் கூறி இருந்தனர். ஆனால் தற்போது தெறி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொள்ள மாட்டார் என கூறப்படுகிறது. அதேசமயம் ஏ.ஆர்.ரகுமானும், ஏ.ஆர்.முருகதாசும் இவ்விழாவில் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது.