இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மதுரை டூ தேனி படத்தில் அறிமுகமானவர் அரவிந்த். தற்போது சூரத்தேங்காய், பீமன் அஸ்தினாபுரம் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதில் சூரத்தேங்காய் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது. மேலும், பாசமலர் என்ற சீரியலில் பொறுப்புள்ள குடும்பத்தலைவன் வேடத்திலும் நடித்து வருகிறார்.
இதுபற்றி அரவிந்த் கூறுகையில், என்னைப்பொறுத்தவரை பாசிட்டீவ், நெகடிவ் என எந்தமாதிரியான வேடமாக இருந்தாலும் அந்தந்த கதாபாத்திரங்களாக மாறி நடிக்க தயாராக இருக்கிறேன். அந்தவகையில், மதுரை டூ தேனி படத்தில் ஒரு வாத்தியார் வேடத்தில் கதையின் நாயகனாக நடித்த நான், சூரத்தேங்காய் படத்தில் ஆக்சன், காமெடி கதையில் நடித்திருக்கிறேன். காஞ்சிபுரம் கதைக்களத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் கதை ஒரு மார்க்கெட்டை மையப்படுத்தி அமைந்துள்ளது. அந்த மார்க்கெட்டில் வாழைமண்டி வைத்திருக்கும் ஒரு இளைஞனாக நான் நடித்திருக்கிறேன்.
அதேபோல் பாசமலர் தொடரில் பொறுப்புள்ள குடும்பத்தலைவராக, பாசமான அண்ணனாக நடித்து வருகிறேன். கதாபாத்திரத்தை உணர்ந்து இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறேன். எனது நடிப்புக்கு நேயர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதேபோல் சூரத்தேங்காய் படம் திரைக்கு வரும்போது ரசிகர்கள் மத்தியில் நான் பேசப்படும் நடிகராகி விடுவேன். காரணம், இந்த படத்தில் நான் நடித்துள்ள கதையின் நாயகன் வேடம் அந்த அளவுக்கு அழுத்தமானது என்று கூறும் அரவிந்த், ஹீரோ-வில்லன் என எந்தமாதிரியான வேடங்களாக இருந்தாலும், திறமைக்கு சவால் விடக்கூடிய கதாபாத்திரங்களில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறேன் என்கிறார்.