தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இர்பான் நாயகனாக நடித்து திரைக்கு வந்திருக்கும் ஆகம் படத்தில் நாயகியாக நடித்திருப்பவர் தீக்ஷிதா. விஜய் ஆனந்த் ஸ்ரீராம் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜெயபிரகாஷ், ரியாஸ்கான், ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் தீக்ஷிதாவுக்கு இர்பானை லவ் பண்ணும் வழக்கமான கதாநாயகி வேடம்தான் என்றாலும், சில கோலிவுட் டைரக்டர்களின் கவனத்தை இழுத்திருக்கிறாராம்.
இதுபற்றி தீக்ஷிதா கூறுகையில், ஆகம் படத்தில் நடித்தது நல்ல அனுபவம். அதோடு, ஒரு நல்ல கதையம்சம் உள்ள படத்தில் அறிமுகமானதை பெருமையாக கருதுகிறேன். இந்த படத்தில் எனது நடிப்பைப்பார்த்து விட்டு, புதுமுகம் மாதிரி இல்லை என்று பலரும் சொல்கிறார்கள். காரணம், நான் மாடலிங் துறையில் இருந்து வந்திருக்கிறேன். பல விளம்பர படங்களில் நடித்த அனுபவம் இருந்ததால் சினிமாவில் நடிப்பது எனக்கு புதுசாக தெரியவில்லை. அதனால் முடிந்தவரை இயல்பான நடிப்பை வெளிப்படுத்தினேன் என்று கூறும் தீக்ஷிதா, அடுத்து நல்ல கதையம்சம் உள்ள படங்களாக செலக்ட் பண்ணி நடிக்கயிருப்பதாகவும் சொல்கிறார்.