இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஒரு மரணத்தை சுற்றி சர்ச்சைகள் எழுவதை பார்த்திருக்கிறோம்.. ஆனால் அந்த மரணித்த நபருக்கு இரங்கல் கூட்டம் நடத்தியதில் கூட சர்ச்சை உருவானதை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா..? இப்போது சூடான விவாதங்களோடு மலையாள திரையுலகில் இந்த சர்ச்சைதான் நடந்துகொண்டிருக்கிறது.. கலாபவன் மணியின் மரணம் ஒருபக்கம் சர்ச்சையை எழுப்ப, இன்னொரு பக்கம் சில தினங்களுக்கு முன் கலாபவன் மணிக்காக சாலக்குடியில் நடத்தப்பட்ட இரங்கல் கூட்டத்தில் கலந்துகொள்ள இயக்குனர் வினயனை அழைக்கவில்லை என்கிற சர்ச்சை கிளம்பியுள்ளது..
கலாபவன் மணியை வைத்து 13 படங்கள் இயக்கிய வினயன், அவருக்கு காட்பாதர் போலத்தான் என்பதை மறுக்க முடியாது. ஆனால் அப்படிப்பட்டவருக்கு மணியின் இரங்கல் கூட்டத்துக்கு அழைப்பு அனுப்பாததன் பின்னணியில் மோகன்லால் இருப்பதாக இயக்குனர் வினயனே குற்றச்சாட்டை கூறியிருந்தார்.. காரணம் வினயனுக்கும் மோகன்லால்-மம்முட்டி இருவருக்கும் பலவருடமாக கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன.. இப்போது இன்னொரு இயக்குனரான பைஜூ கொட்டாரக்கரா என்பவர், வினயன் வந்தால் தான் இரங்கல் கூட்டத்துக்கு வரமாட்டேன் என ஒரு இசையமைப்பாளர் முன்னிலையில் வைத்து மோகன்லால் சொன்னதை தான் கேட்டதாக கூறி எரிகிற தீயில் இன்னும் கொஞ்சம் எண்ணெயை ஊற்றி இருக்கிறார். இன்னும் என்னவெல்லாம் கிளம்ப போகிறதோ..?