இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
விலங்குகளுக்கு ஏதாவது ஒன்று என்றால் துடி துடித்து போவார் நடிகை த்ரிஷா. அப்படிப்பட்டவர் ஒரு குதிரையின் காலை ஒடித்தவரை சும்மா இருப்பாரா.? சம்பந்தப்பட்ட நபருக்கு சாபம் வழங்கியுள்ளார்.
உத்தரகண்ட் மாநிலத் தலைநகர் டேராடூனில், நேற்று முன்தினம் பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது, பாதுகாப்புப் பணியில் இருந்த குதிரைப் படை போலீசாரை நோக்கி, பா.ஜ.,வினர் திடீரென தாக்குதல் நடத்தினர். இதில், எம்.எல்.ஏ., கணேஷ் ஜோஷி, சக்திமான் என்ற போலீஸ் குதிரையை, கட்டையால் பலமாக தாக்கினார். பலத்த காயமடைந்த குதிரைக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதனுடைய இடது பின்னங்காலில், பல முறிவுகள் ஏற்பட்டு உள்ளன. இது தொடர்பான வீடியோ, படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.
இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிராணிகள் வதை தடுப்புச் சட்டமும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், விலங்குகள் நல ஆர்வலரான நடிகை த்ரிஷாவும் இந்த சம்பவத்திற்கு தனது கோப அலையை வெளிப்படுத்தியுள்ளார்.
த்ரிஷா , தன் டுவிட்டர் பக்கத்தில், குதிரையின் காலை உடைத்த பாஜக எம்எல்ஏ, நரகத்தில் எரிய வேண்டும் என்று சாபம் கொடுத்துள்ளார்.