சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
தமிழ்த் திரையுலகத்தில் பத்திரிகையாளர்களாக இருந்து திரையுலகத்தில் இயக்குனர்களாகவும், நடிகர்களாகவும் மாறி பெயர் பெற்றவர்கள் பலர் இருக்கிறார்கள். பெரும்பாலான திரைப்பட பத்திரிகையாளர்களாக இருப்பவர்கள் திரைப்படத் துறையில் நுழைவதற்காகவே வந்தவர்களாகவும் இருப்பார்கள். 50 வயதைக் கடந்த பல பத்திரிகையாளர்களிடம் கேட்டால் அவர்களுடைய சினிமா கனவுகள் பல வெளிவரும்.
தமிழ்த் திரையுலகத்தில் கடந்த சில வருடங்களாகவே கதை ஆசிரியர் என்ற ஒரு துறையே காணாமல் போய்விட்டது. அந்தக் காலத்தில் கூட பிரபல தயாரிப்பு நிறுவனங்களில் கதை இலாகா என்ற ஒன்று இருக்கும். அவர்கள்தான் கதையை மேலும் மேலும் விவாதித்து அதை ரசிகர்களுக்குப் பிடிக்கும் விதத்தில் உருவாக்கி இயக்குனர்களிடம் கொடுப்பார்கள்.
சமீபத்தில் வந்த பல படங்களில் கதை என்றால் என்ன என்று கேட்கும் நிலைதான் இருக்கிறது. சிலர் அவர்களாகவே எங்களது படத்தில் கதையே இல்லை என்று சொல்லவும் செய்தார்கள். விஜய் சேதுபதி அடுத்து நடிக்க உள்ள 'ஆண்டவன் கட்டளை' படத்தின் கதையை பத்திரிகையாளரான அருள் செழியன் எழுதியிருக்கிறார். இந்தப் படத்தை இயக்கப் போவது 'காக்கா முட்டை' படத்தை இயக்கிய மணிகண்டன். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் ஆரம்பமானது. கதையாசிரியர் என்ற துறை பழைய படி வந்தால்தான் தமிழ் சினிமாவில் மேலும் பல புதிய பரிமாணங்களுடன் படங்கள் வரும். அந்த விஷயத்தை மணிகண்டனும், விஜய் சேதுபதியும் ஒருங்கிணைந்து மீண்டும் தொடங்கியுள்ளார்கள்.