ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு |
சௌகார்பேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி, தன்னுடைய நடிப்பாற்றலின் மூலம் அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார் நடிகர் ஹிரேஷ். இவர் நடிகர் மம்மூட்டியின் தங்கை மகன் ஆவார். இவர் மலையாளத்தில் பிரபல வில்லனாக நடித்து வருகிறார். மலையாளத்தில் இதுவரை 10 படங்களில் வில்லனாக நடித்துள்ளார். மலையாளத்தில் இவருடைய நடிப்பை பார்த்த இயக்குநர் வடிவுடையான் இவருக்கு இப்படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு வழங்கி உள்ளார்.
இதை பற்றி நடிகர் ஹிரேஷ் கூறியதாவது... ''சௌகார்பேட்டை படத்தின் ஆரம்ப காட்சியிலேயே மிரட்டலான வில்லனாக நான் காரில் வந்து இறங்குவேன். தமிழில் நடிக்கும் முதல் படத்திலேயே ஆரம்ப காட்சியில் நடித்தது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் எனலாம். நடிகர் சுமனின் மகனாக அவருடன் நடித்தது மறக்க முடியாத ஒன்று. இப்படத்தில் நடித்துள்ளதை பற்றி என்னுடைய மாமா மும்முட்டி அவர்களிடம் கூறினேன். தமிழில் அறிமுகமாகும் முதல் படத்திலேயே "மைனா", "சாட்டை" போன்ற மிகப்பெரிய வெற்றி படங்களை தயாரித்த நிறுவனத்தில் அறிமுகமாகிறாய், படத்தை வெளியிடும் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் மிகபெரிய நிறுவனம் நிச்சயம் நீ வெற்றி பெறுவாய் என்று வாழ்த்தினார்.
தமிழில் சௌகார்பேட்டை படமும் மற்றும் மலையாளத்தில் நான் நடித்த "கொல மாஸ்" படமும் வெளியாகியது. இரண்டிலும் நான் வில்லன் கதாபத்திரத்தில் நடித்திருந்தேன். இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழில் மேலும் பல படங்களில் நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று கூறினார் நடிகர் ஹிரேஷ்.