கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
களவாணி படத்தில் தமிழுக்கு வந்தவர் ஓவியா. அதையடுத்து சில படங்களில் ஹோம்லியாக தனது நடிப்பைத் தொடர்ந்த அவர், கலகலப்பு படத்தில் இருந்து படுகவர்ச்சியான நடிகையாகவும் மாறினார். அந்த படத்தில் அஞ்சலிக்கு இணையாக அயிட்டம் நடிகை போன்று செம குத்தாட்டம் போட்டார் ஓவியா. ஆனால் அந்த அளவுக்கு அவர் இறங்கி வந்து நடித்தபோதும் கோலிவுட்டில் ஓவியாவுக்கு பெரிய இடம் கிடைக்கவில்லை. இப்போதுவரை மார்க்கெட்டில் பின்தங்கியே இருந்து வருகிறார்.
இந்த நிலையில், ராஜதுரை இயக்கத்தில் நடித்துள்ள சீனி படத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார் ஓவியா. அந்த படத்தில் யானையுடன இணைந்து நடித்துள்ள ஓவியா, லீடு ரோலில் நடித்திருப்பதால் அந்த படம் வெற்றி பெற்றால் தனக்கு பெரிய நடிகர்களின் படங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார். இந்த நிலையில், விளையாடவா என்ற படத்தை இயக்கிய நந்தகுமார் அடுத்து இயக்கும் ஒரு பேய் படத்தில் நடிக்க தற்போது ஓவியா ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த படத்தில் புதுமுக நடிகர்தான் ஹீரோ என்றபோதும், ஓவியாதான் லீடு ரோலில் நடிக்கிறாராம். குறிப்பாக, அரண்மனையில் ஆண்ட்ரியா, அரண்மனை-2வில் திரிஷா போன்ற நடிகைகள் நடித்தது போன்று படம் முழுகக அதிரடி பேயாக வந்து மிரட்டுகிறாராம் ஓவியா.