சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
மக்களுக்கு நன்கு அறிமுகமான காமெடி நடிகர் செல்வகுமார். சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார், ரமணா, அந்நியன், அலெக்ஸ் பாண்டியன், பூலோகம் படங்களில் பெரிய கேரக்டர்களில் நடித்துள்ளார். கோவை அருகே உள்ள துடியலூரைச் சேர்ந்த செல்வகுமார், சென்னை தி.நகர் சீனிவாச தெருவில் மனைவி கீதா, மகள்கள் ரோகிணி, கார்த்திகாக ஆகியோருடன் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் செல்வகுமார் தனது நண்பர் கோவை செந்திலுடன் பர்கிட் ரோட்டில் உள்ள நண்பன் வீட்டுக்கு சென்றுவிட்டு ஸ்கூட்டரில் திரும்பிக் கொண்டிருந்தார், அப்போது திடீரென ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்ததால் இருவரும் தடுமாறி சாலையில் விழுந்தனர். இதில் செல்வகுமாரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக இருவரையும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு செல்வகுமார் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். அவருக்கு வயது 58. கோவை செந்தில் சிகிச்சை பெற்று வருகிறார். செல்வகுமாரின் இறுதி சடங்குகள் இன்று அவரது சொந்த ஊரில் நடக்கிறது. செல்வகுமார் ஹெல்மெட் அணிந்திருந்தால் உயிர் பிழைத்திருப்பார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.