சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
வாகை சூடவா இனியா அந்த படம் வெளியான நேரத்தில் தமிழில் முன்னணி இடத்துக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர். ஆனால் அப்போது அவரைத்தேடிச்சென்ற சில கமர்சியல் படங்களில் நடிக்க அவர் மறுத்ததால் பெரிய ஹீரோக்களின் படங்கள் அவருக்கு கிடைக்கவில்லை. அதன்காரணமாக இப்போதுவரை மூன்றாம்தட்டு நடிகையாகவே இருந்து கொண்டிருக்கிறார். அதோடு, கதாநாயகி வாய்ப்புகள் குறைந்து விட்டதால் கேரக்டர் ரோல்களிலும் நடிக்கிறார்.
மேலும், சினிமா எதிர்பார்த்தபடி கைகொடுக்காததால் இனியாவின் கவனம் சிங்கப்பூர், மலேசியாவில் நடன நிகழ்ச்சிகள் நடத்துவதில் திரும்பியது. அதனால் அவர் மாதத்தில் 20 நாட்கள் வெளிநாடுகளில்தான் இருக்கிறார். அதன்காரணமாக, ஏதாவது படங்களில் நடிக்க அவருக்கு அழைப்பு விடுத்தால் உடனடியாக அவரால் சென்னைக்கு வர முடிவதில்லையாம். அந்தவகையில், தற்போது திரைக்கு வரத்தயாராகிக்கொண்டிருக்கும் அர்த்தநாரி படத்தில் ஹீரோயினாக நடிக்க வேண்டியவரே இனியாதானாம்.
ஆனால், அப்படக்குழுவினர் அழைத்தபோது அவர் உடனடியாக ஆஜராகாததினால் அதையடுத்து அருந்ததியை அந்த வேடத்துக்கு புக் பண்ணியிருக்கிறார்கள். ஆனால் ஆரம்பத்தில் அந்த படம் கைநழுவிப்போனதை நினைத்து பெரிதாக பீல் பண்ணாத இனியா, இப்போது அர்த்தநாரி படப்பிடிப்பு முடிந்து விளம்பரங்கள் முடுக்கி விடப்பட்டிருப்பதால் நல்லதொரு ஆக்சன் பட வாய்ப்பை இழந்து விட்டோமே என்று பீல் பண்ணுகிறாராம்.