ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தஞ்சாவூர் மாவட்டம், சோழகன் குடிகாடு பகுதியை சேர்ந்த விவசாயி பாலன் என்பவர், டிராக்டர் வாங்க வங்கி ஒன்றில் விவசாய கடன் பெற்று திருப்பி செலுத்தவில்லை. இதனையடுத்து விவசாயிக்கு சொந்தமான டிராக்டரை பறிமுதல் செய்யும் சம்பவத்தின் போது போலீசார் விவசாயி பாலன் மீது கடுமையான தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, இந்த பிரச்னை மனித உரிமைகள் ஆணையம் வரை சென்றது. இப்பிரச்னை தொடர்பாக விவசாயிகளும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் விவசாயி பாலன் தர வேண்டிய கடனை, தான் ஏற்பதாக அறிவித்துள்ளார் நடிகர் விஷால். பாலன் வங்கிக்கு செலுத்த வேண்டிய ரூ.1.35 லட்சத்தை தான் தருவதாக அறிவித்துள்ளார் விஷால்.
சமீபத்தில், மருது படப்பிடிப்பிற்காக விருதுநகரில் இருந்தபோது அங்குள்ள ஒரு கிராமத்தில் 10 வீடுகளுக்கு கழிப்பறை கட்டித்தர ரூ.80 ஆயிரம் நிதி வழங்கினார் விஷால். மேலும் அந்த ஊரில் அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறை கட்டித்தர தன் நண்பர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டவர்களிடம் உதவியும் கேட்டுள்ளார். அவர்களும் உதவ முன் வந்தது இங்கு கவனிக்கத்தக்கது.
கருணாகரன் ரூ.1 லட்சம் உதவி : பாலனுக்கு விஷால் உதவியதை தொடர்ந்து, தமிழ் சினிமாவில் தற்போது காமெடியில் அசத்தி கொண்டிருக்கும் நடிகர் கருணாகரனும், பாலனுக்கு உதவியுள்ளார். அவர் பாலனின் வங்கி கணக்கில் ரூ.1 லட்சம் செலுத்தி உள்ளார். கருணாகரனின் இந்த உதவி பாராட்டத்தக்கது.
விவசாயிகள் தான் நம் நாட்டின் கண்கள், விவசாயிகளுக்காக அதை செய்வோம், இதை செய்வோம் என்று மேடைக்கு மேடை முழங்கும் அரசியல் கட்சியினருக்கு மத்தியில் கஷ்டப்பட்ட விவசாயின் கடனை அடைத்த விஷால் மற்றும் கருணாகரனின் முயற்சியை கண்டிப்பாக பாராட்டியே தீர வேண்டும்.