இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சினிமாவை ஆட்டிப்படைக்கும் மூட நம்பிக்கையை ஒழிக்க வேண்டும். நல்ல கதை, ரசணையுள்ள டைரக்டர் இவர்களால் தான் நல்ல படங்களை தர முடியும் என்கிற நம்பிக்கை வர வேண்டும் என்கிறார் டைரக்டர் மோகன்ராஜா.
மேலும் அவர் கூறுகையில், சினிமாவில் மூட நம்பிக்கை, செண்டிமென்ட், டைட்டீல் பிரச்னை சினிமா தொடங்கிய காலத்தில் இருந்தே இருக்கிறது. குறிப்பாக, நான் இயக்கிய தனி ஒருவனை டவுட்டா சொன்னார்கள். ஆனால் அந்த படம் மிகப்பெரிய சக்சஸ் ஆனது. தனியா ஒருவன்னா வச்சேன். தனி ஒருவன்னுதானே வச்சேன். தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் என பாரதியின் பாடலில் இருந்துதானே அந்த டைட்டீலை வைத்தேன். தனி ஒருவனுக்கு என்னை பிச்சைக்காரன் மாதிரி பாத்தாங்க. பிச்சைக்காரன்னே வச்சா எப்படி பாத்திருப்பாங்க. அதே மாதிரி, எனக்கு தெரிஞ்சு இறுதிசுற்று டைட்டீலை இது மாதவனுக்கு இறுதிச்சுற்றுன்னு நினைக்கிறேன் என்றார்கள்.
ஆனால் அந்த படங்கள் வெற்றி பெற்று மூடநம்பிக்கைகளுக்கு சொல்லி வச்ச மாதிரி அடி கொடுத்தது. கதை, டைரக்டர், தமிழ் மக்கள் ரசணை என்பதை தனி ஒருவன், இறுதிச்சுற்று, பிச்சைக்காரன் என ஒவ்வொரு படமாக வெற்றி பெற்று நிரூபித்து வருகின்றன. இதை ரொம்ப அழுத்தமாக பேசினாலும் தப்பு. அப்புறம் இதையே செண்டிமென்டாக்கி விடுவார்கள். அப்புறம் அபசகுணம்னு என்றுகூட டைட்டீல் வைக்க ஆரம்பிச்சிடுவாங்க. மேலும், அஷ்டலட்சுமியில் 7 லட்சுமி போயிட்டாலும் தைரிய லட்சுமி உன்னுடன் இருந்தால் போதும் என என் அம்மா முதல்ல எனக்கு சொல்லி அனுப்புனாங்க. அதை நம்பித்தான் நான் வந்தேன். தைரியலட்சுமி கூட வரும்போது அதிர்ஷ்ட லட்சுமியெல்லாம் பின்னாடி ஓடி வருவாங்க. அப்படித்தான் என்னோட கேரியர் தொடங்கியது. இப்போது வரை போய்க்கிட்டு இருக்கு என்கிறார் மோகன்ராஜா.