ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வல்லவன் படத்தில் ஜோடி சேர்ந்த சிம்பு-நயன்தாரா இருவரும் அந்த படத்தில் நடித்தபோது காதலில் விழுந்தனர். ஆனால் அப்படம் திரைக்கு வருவதற்குள் அவர்களது காதலும் முறிந்து போனது. அதனால் அதையடுத்து அவர்கள் மீண்டும் ஜோடி சேராத நிலையில், பல வருடங்களுக்குப்பிறகு இது நம்ம ஆளு படத்தில் இணைந்தனர். பாண்டிராஜன் இயக்கும் அப்படம் பைனான்ஸ் பிரச்சினையால் தாமதமாகி வந்தது. விளைவு, இது நம்ம ஆளு படத்திற்கு பிறகு பசங்க-2, கதகளி என்ற இரண்டு படங்களை இயக்கி விட்டார் பாண்டிராஜ். இந்த நிலையில், மீண்டும் இது நம்ம ஆளு படத்திற்காக அப்பட நாயகி நயன்தாராவிடம் கால்சீட் கேட்டபோது, கொடுத்த கால்சீட்டை வீணடித்து விட்டதால் மீண்டும் கால்சீட் தரமறுத்து விட்டார்.
அதனால், நயன்தாரா நடிக்க வேண்டிய பாடலை அதே படத்தில் இன்னொரு நாயகியாக நடித்துள்ள ஆண்ட்ரியாவை வைத்து படமாக்க திட்டமிட்டனர். ஆனால் இப்போது தெலுங்கு நடிகை அடாசர்மாவை அந்த பாடலில் நடனமாட வைக்க திட்டமிட்டுள்ளனர். அதிகப்படியான கிளாமராக நடிக்க கேட்டுக்கொண்டதாலேயே அப்பாடலில் நடனமாட ஆண்ட்ரியா மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும், இந்த பாடல் படமாக்கப்பட்டு விட்டால் இது நம்ம ஆளு ரிலீசுக்கு தயாராகி விடுமாம்.