ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
'சப்வே, நான் படிச்ச ஸ்கூல் அப்படி' என்ற இரண்டு குறும்படங்களின் திரையீட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு இயக்குனர் சற்குணம் பேசியதாவது: இந்த இரண்டு குறும்படங்களையும் பார்த்தேன். இரண்டு படங்களுமே நன்றாக இருந்தன, தரமாகவும் இருந்தன. இன்று குறும்படங்கள் கவனிக்கப்படுகின்றன. இன்றைய தமிழ்ச்சினிமா குறும்பட இயக்குநர்கள் கையில் போய்க்கொண்டு இருக்கிறது. குறும்பட இயக்குநர்கள் தான் தமிழ்ச் சினிமாவில் இப்போது தரமான படங்களின் இயக்குநர்களாக, முக்கியமான படங்களின் இயக்குநர்களாக அறியப்படுகிறார்கள். முன்பெல்லாம் ஊரிலிருந்து இங்கு வந்து தான் சினிமாவைக் கற்றுக் கொள்வார்கள். இப்போது காலம் மாறிவிட்டது. இங்கே வரும் போதே ஒரு குறும்படம் எடுத்துவிட்டு நேராக தயாரிப்பாளரிடம், நானும் ஒரு சினிமா எடுத்திருக்கிறேன் என்று காட்டிவிட்டு வாய்ப்பு கேட்கிறார்கள். வருங்கால தமிழ்ச் சினிமா இனி குறும்பட இயக்குநர்கள் கையில்தான் இருக்கும் என்பதை நான் நம்பிக்கையுடன் கூறுவேன் என்றார்.