'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
செய்தி சேனல் ஒன்றின் 360 டிகிரி உலகை சுற்றி என்ற நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்கு வந்தவர் சாந்தினி. பின்னர் அவரே அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளராகவும் ஆனார். அதன் பிறகு திரைகடல், வானவில் லைப், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தற்போது வேந்தர் டி.வியில் புத்தம்புது காலை, ஹலோ டாக்டர், ரீல்பெட்டி ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். சீரியலில் நடிக்க வரும் வாய்ப்புகளை மறுத்து வருகிறார் சாந்தினி.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நான் வீட்டுக்கு ஒரே பிள்ளை அதனால் மீடியாவுக்கு அனுப்பவே வீட்டில் தயங்கினார்கள். ஆனால் இப்போது நான் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளால் அவர்கள் மனம் மாறி பாராட்டவும், ஊக்கப்படுத்தவும் செய்கிறார்கள். ஆனால் நடிக்க மட்டும் அனுமதிக்கவில்லை. எனக்கும் நடிப்பில் விருப்பம் இல்லை. அதனால்தான் பல வாய்ப்புகளை மறுத்தேன். நல்ல தொகுப்பாளினி என்று பெயர் வாங்கினால் போதும் என்கிறார் சாந்தினி.