தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
முற்றிலும் புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி இருக்கும் படம் பதனி. ஜின்னா பிரதர்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் ஜே.உத்தமன் என்பவர் தயாரித்துள்ளார். ஆர்.ஜே.பிரகாஷ் என்பவர் இயக்கி உள்ளார். ஸ்ருதி பிரபா இசை அமைத்துள்ளார், குலோத்துங்க வர்மன் இசை அமைத்துள்ளார். இதில் 150 புதுமுங்கள் நடித்துள்ளனர்.
இதுபற்றி இயக்குனர் ஆர்.ஜே.பிரகாஷ் கூறியதாவது: சென்னைக்கு அருகில் இருந்தாலும் காஞ்சிபுரம் தமிழ் சினிமாவால் கண்டுகொள்ளப்படாத பகுதி. அந்த பகுதியின் கதை களத்தை கொண்டு உருவாகி இருக்கும் படம். பட்டு நெசவு தொழிலாளர்களின் வாழ்க்கை கதை. அவர்கள் எந்த அளவுக்கு உழைக்கிறார்கள். எப்படி ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை சீரியசாகவும், காமெடியாகவும் சொல்கிற படம். அந்த பகுதி முகங்கள் வேண்டும் என்பதற்காக அந்த மண்ணைச் சேர்ந்த மக்களையே நடிக்க வைதிருக்கிறறோம். ஹீரோ, ஹீரோயின் உள்பட 150 புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள் என்றார்.