ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பின்னர் இந்திய திரை உலக ரசிகர்களுக்கு பரிச்சையமான அப்படத்தின் இயக்குனர் ராஜமௌலி, பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். 2017 ஏப்ரல் 17ல் இப்படத்தை திரைக்கு கொண்டவரவுள்ளதாக ராஜமௌலி கூறியுள்ளார். ராஜமௌலி தனது கனவு படமான கருடா படத்தை ரூ 1000 கோடி செலவில் உருவாக்க திட்டமிட்டிருக்கின்றார் என்பது அறிந்ததே. இப்படத்தில் ஜுனியர் என்.டி.ஆர் நாயகனாக நடிக்கவுள்ளதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் தற்போது இப்படத்தில் பாலிவுட்டின் பிரபல நடிகர் ஹிருத்திக் ரோஷனை நாயகனாக நடிக்க வைக்க ராஜமௌலி முடிவு செய்துள்ளாராம்.
ஜுனியர் என்.டி.ஆர் நடிப்பில் ஸ்டூடன்ட் நம்பர் 1, யம்டொங்கா, சிம்ஹட்ரி போன்ற படங்களை இயக்கிய ராஜமௌலி ஜுனியர் என்.டி.ஆருடன் வேறு ஒரு படத்தில் இணைவேன் என்றும் ஆனால் அது கருடா இல்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். ராஜமௌலியின் இந்த திடீர் முடிவு ஜுனியர் என்.டி.ஆர் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.