தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாள நடிகர் கலாபவன் மணியின் திடீர் மரணம் ஏற்படுத்திய அதிர்ச்சியைவிட, அவரது மரணத்தில் அவரது உடலில் கலந்த விஷத்திற்கு முக்கிய பங்கு இருக்கிறது என போஸ்ட் மார்டம் பண்ணிய மருத்துவர்கள் சொன்னது தான் இன்னும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. கடந்த ஞாயிறு இரவு மரணத்தை தழுவிய கலபாவன் மணியின் உடல் நேற்று முன் தினம் அடக்கம் செய்யப்பட்டது.. ஆனால் அதற்கு முன்பே கலாபவன் மணியின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது சகோதரர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் கவனம் செலுத்தி விசாரித்தார்கள்.. அதற்கேற்ப அவரது உடலில் விஷம் கலந்திருப்பதாக மருத்துவ அறிக்கை சொல்ல, அவரது தகனத்திற்கு முன்பே கலபாவன் மணியின் அவுட் ஹவுஸை சீல் வைத்து போலீஸ் விசாரணையும் துரிதப்படுத்தினார்கள்.
கடைசியாக கலாபவன் மணி மது அருந்தி, அதனால் ஏற்பட்ட உடல் உபாதையால் மருத்துவமனையில் சீரியசான கண்டிஷனில் செர்க்கப்பட்டுத்தான் மரணம் அடைந்துள்ளார்.. அதனால் அவர் உயிருடன் இருக்கும்போது கடைசியாக அவுட் ஹவுசில் அவருடன் சேர்ந்து மது அருந்திய நகைச்சுவை நடிகர் ஜாபர் இடுக்கி மற்றும் கலாபவன் மணியின் நண்பர்கள் நான்கு பேர் என மொத்தம் ஐந்து பேரை சந்தேக வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர் போலீஸார்.
ஆனால் நடிகர் ஜாபர் இடுக்கி இதுகுறித்து சொலும்போது, கலாபவன் மணியுடன் தான் மது அருந்தியது அவருடன் புதிய படம் ஒன்றை பற்றி பேசுவதற்காக சென்றபோதுதான். அங்கே அவரின் நண்பர்களும், வேறு ஒன்றிரண்டு சினிமாக்காரர்களும் உடன் இருந்தார்கள்.. அப்படி அனைவரும் கூட்டாக மது அருந்தியபோது கலாபவன் மணி வெறும் பியர் மட்டுமே குடித்தார். நிச்சயமாக அதில் விஷம் கலைக்கப்பட வாய்ப்பு இல்லை.. ஆனால் அவரது உடலில் விஷம் பரவியுள்ளது என மருத்துவர்கள் கூறியுள்ளார்கள் என்பதால், அதற்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க போலீசுக்கு உதவுவதற்கு தயாராகவும் இருக்கிறேன் என கூறியுள்ளார் நடிகர் ஜாபர் இடுக்கி.