தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கேரளா மட்டுமல்லாது தமிழ்நாட்டிலும் எண்ணற்ற ரசிகர்களை கொண்டிருந்த மலையாள நடிகர் கலாபவன் மணி நேற்று முன் தினம் மரணம் அடைந்தார். அவரது சாவில் மர்மம் உள்ளதாக கூறப்பட்டதால் நேற்று காலை அவரது உடல் பிரேதபரிசோதனை செய்யப்பட்டு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அங்கிருந்து அவரது உடல் மதியம் 11.30 மணி அளவில் திருச்சூரில் உள்ள கேரளா சங்கீத நாடக அகாடமிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு நடிகர்கள் ஜெயராம், முகேஷ், சீனியர் நடிகை கே.பி.ஏ.சி லலிதா உள்ளிட்ட பலர் தங்களது இறுதி மரியாதையை கலாபவன் மணிக்கு செலுத்தினார்கள்.
அதன்பின் 1.30 மணி அளவில் அவரது உடல் சாலக்குடி முனிசிபல் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கேரளாவில் பல பகுதிகளிலும் இருந்து திரண்டு வந்திருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களும் திரையுலக பிரமுகர்கள் அனைவரும் வரிசையில் நின்று அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அதன்பின் சாலக்குடி அருகில் உள்ள கலாபவன் மணியின் சொந்த ஊரான மணிக்கூடாரம் பகுதிக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது.. ஏராளமான உள்ளூர் பொதுமக்கள், அரசு அதிகாரிகள் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்..
அதன்பின் மாநில அரசு மரியாதையுடன் போலீஸ் அணிவகுப்புடன் புறப்பட்ட கலாபவன் மணியின் இறுதி ஊர்வலம் மாலை 5 மணி அளவில் மயான மேடையை அடைந்தது. துப்பாக்கி ஏந்திய போலீஸார் மரியாதை வழங்க 5.30 மணி அளவில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. கலாபவன் மணிக்கு ஒரே ஒரு மகள் மட்டும் என்பதால், கலாபவன் மணியின் ஈமச்சடங்கை அவரது சகோதரி மகனான தர்ஷன் செய்து முடித்தார். சாலக்குடி பகுதியில் கலாபவன் மணியின் இறுதி யாத்திரைக்காக கூடிய கூட்டம் இதுநாள் வரை அந்த பகுதியே கண்டிராத ஒன்று என மீடியாக்களில் பேசப்பட்டது..
மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற அந்த மாபெரும் கலைஞனின் ஆத்மா சாந்தி அடையட்டும்.!