டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மலையாள திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் சமீபகாலமாக மரணம் அடைந்து வருவது ஒரு பக்கம் அதிர்ச்சி தர, அந்த வரிசையில் நேற்று இரவு கலாபவன் மணியும் மரணமும் சேர்ந்துகொண்டது வேதனைதான்... ஆனால் இப்பொது அவரது மரணத்தில் ஒரு திருப்பமாக குறைந்த வயதே ஆன கலாபவன் மணி இயற்கையான முறையில் மரணம் அடையவில்லை என்று அவரது சகோதரர் சந்தேகம் எழுப்பி போலீசில் புகார் கொடுக்க, தற்போது அதை செயற்கை மரணமாக போலீஸார் பதிவுசெய்துள்ளனர்.. கலாபவன் மணியின் உடலில் மெத்தில் ஆல்கஹால் எனும் நஞ்சு பரவியுள்ளதால் இது அவர் உடலுக்குள் எப்படி செலுத்தப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்..
கேரளாவில் சாலக்குடியில் உள்ள கலாபவன் மணியின் வீட்டை ஒட்டியே அமைந்துள்ள அவரது அவுட் ஹவுசில் இருந்து தான் அவர் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். விசாரணையின் முதற்கட்டமாக அந்த அவுட் ஹவுஸை பூட்டி சீல் வைத்து, போலீஸ் பாதுகாப்பையும் போட்டுள்ளனர். கலாபவன் மணியின் உடல் போஸ்ட் மார்டம் முடிந்து அவரது இல்லத்துக்கு எடுத்து செல்லப்பட்டு விட்டது. பொதுமக்களின் அஞ்சலிக்குப்பிறகு இன்று மாலை அவரது உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.