Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கலாபவன் மணி மறைவு : பிரதமர் மோடி, கமல்ஹாசன், சூர்யா இரங்கல்

07 மார், 2016 - 13:09 IST
எழுத்தின் அளவு:
PM-Modi,-Kamal,-Surya-Condolence-for-Kalabhavan-Mani-dead

மறைந்த மலையாள நடிகர் கலாபவன் மணியின் திடீர் மறைவு மலையாளத் திரையுலகத்தை மட்டுமல்ல தென்னிந்தியத் திரையுலகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. கடந்த வாரம் தான் மலையாள இயக்குனரான ராஜேஷ் பிள்ளை திடீர் மரணம் அடைந்தார். ஜனவரி மாதம் மலையாள நடிகையான கல்பனா மாரடைப்பால் திடீர் மரணம் அடைந்தார். அவர்கள் இருவரின் மரணத்திலிருந்து மீளாத மலையாளத் திரையுலகம் நேற்று இரவு கலாபவன் மணியின் மறைவாலும் அதிர்ச்சியடைந்தது. கலாபவன் மணி பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களையும், இயக்குனர்களையும் கவர்ந்தவர்.


தமிழில் 1998ல் வெளிவந்த 'மறுமலர்ச்சி' படம் முதல் கடைசியாக அவர் நடித்து வெளிவந்த 'பாபநாசம்' வரை எண்ணற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். குணச்சித்திரம், நகைச்சுவை, வில்லன் என தமிழிலேயே அவர் பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சில தெலுங்கு, கன்னடப் படங்களிலும் நடித்துள்ள கலாபவன் மணி மறைவுக்கு தென்னிந்தியத் திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


கலாபவன் மணி குடும்பத்தாருக்கு பிரதமர் நரேந்திர மோடி சார்பாக அவரது அலுவலகம் மூலம் இரங்கல் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.


நடிகர் கமல்ஹாசன், “நண்பன் கலாபவன் மணியின் மறைவு வருத்தமடைய வைத்துள்ளது. மற்றுமொரு மலையாளி சகோதரர் கல்லீரர் நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளார். அவரது பணி அவரால் ஈர்க்கப்பட்டவர்களிடம் தொடரும்,” எனக் கூறியுள்ளார்.


நடிகர் சூர்யா, “மிகச் சிறந்த நடிகருக்கு என்னுடைய மரியாதை. ஒரு நல்ல நண்பர். அவருடன் செலவிட்ட நேரம் நெஞ்சுக்குள் இருக்கிறது, அவரது ஆன்மா சாந்தியடையட்டும்,” எனக் கூறியுள்ளார்.


2000ம் ஆண்டில் 'வாசந்தியும் லட்சுமியும் பின்னே ஞானும்' என்ற படத்திற்காக சிறப்பு ஜுரி தேசிய விருது பெற்றவர் கலாபவன் மணி என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம்தான் விக்ரம் நடிக்க 'காசி'யாக தமிழில் ரீமேக் செய்யப்பட்டது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in