தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கலை உலகில் பண மழை பொழியும் சினிமாவின் பிரமாண்டத்திற்கு முன் தாக்குப் பிடிக்க முடியாத நாடகக் கலையை, அதன் மீது கொண்ட அதீத ஆர்வத்தால் உயிரூட்டி வளர்த்தெடுக்க போராடும் தமிழக பெண் கலைஞர்களில் முக்கிய இடத்தில் உள்ளார் நடிகையும், நாடக தயாரிப்பாளருமான மதுவந்தி. மூன்று ஆண்டுகளில் 200க்கும் அதிகமான மேடைகளில் நாடகங்களை நடத்தி, அசாத்திய சாதனைப் பெண்ணாக வலம்வரும் அவர், மதுரை வந்தபோது நம்மிடம்...
* நாடகம் மீதான ஆர்வத்திற்கு காரணம்?
என் குடும்பம் தான். பிறந்தது முதல் குடும்ப சூழலுடன் நாடக சூழலிலும் இணைந்தே வளர்ந்தேன். சினிமாவில் குணச்சித்திரம், நகைச்சுவை கேரக்டர்களில் அப்பா (ஒய்.ஜி. மகேந்திரன்) நடித்தாலும் நாடகம் தான் அவர் மூச்சாக இருந்தது. அதுபோல் தான் நானும்.
* சினிமா ஆசை?
சினிமா ரத்தமும் என் உடலில் ஓடுகிறது. அப்பாவை போல் நகைச்சுவை கேரக்டர்களில் நடிக்க பிடிக்கவில்லை. அழுது வடியும் அக்கா... சோக மூஞ்சி அம்மா போன்ற கேரக்டர் அல்லாமல் அழுத்தமான ரோலில் தான் நடிப்பேன்.
* நாடகம் மூலம் சாதிக்க நினைப்பது...
தமிழர்களுக்கு நாடகம் மீது தனி ஆர்வம் உண்டு. நாடக கலையை உலக அரங்கிற்கு கொண்டு செல்ல வேண்டும். ஆண்டுதோறும் நடக்கும் வேர்ல்டு தியேட்டர் பெஸ்டிவெல் நிகழ்ச்சியில், பிரெஞ்ச், இத்தாலி... என பல மொழி நாடகங்கள் அரங்கேறுகின்றன. ஆனால் தமிழ் நாடகம் இதுவரை இடம் பெறவில்லை. அந்த அரங்கத்திற்கு தமிழ் நாடகத்தை கொண்டு செல்ல வேண்டும்.
* இதுவரை கண்ட மேடைகள்...
மூன்று ஆண்டுகளில் 45 மேடைகளில் சக்தி நாடகம், 70 மேடைகளில் சிவசம்போ நாடகம். 104 மேடைகளில் பெருமாளே நாடகம் என 200க்கும் மேற்பட்ட மேடைகளில் எங்கள் குழு
நடித்துள்ளது. திரைக்கு பின்னால் (சினிமா) பல முறை டேக் கேட்டு நடிக்க வாய்ப்புள்ளது. ஆனால், திரைக்கு முன்னால் (நாடகம்) லைவ்வாக நடிப்பதில் தான் சவால் அதிகம்.
* மனதை கவர்ந்த நாடகம்?
என் அப்பா 1980ல் எழுதி நடித்து வெளியான மூன்று ரூபாய்க்கு மூன்று கொலைகள் நாடகம். அதன் மையக் கரு ஸ்பிலிட் பெர்ஷனாலிட்டி. அப்போது அந்த விஷயம் பேசப்பட்டது.
* வெளி நாடுகளில் தமிழ் நாடகங்களின் நிலை?
அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், வளைகுடா போன்ற நாடுகளில் உள்ள தமிழர்கள், தமிழ் நாடகத்திற்காக ஏங்கி கொண்டிருக்கின்றனர். அதன் தாக்கம் அங்கு அதிகம். பல முறை இந்நாடுகளில் நாடகங்கள் நடத்திஉள்ளோம்.
* நாடக உலகின் உங்களின் போட்டியாளர்?
என் அப்பா தான். அவரது குழுவிற்கும், எனது குழுவினருக்கும் தான் இப்போது கடும் போட்டியே.
* நாடகங்களை பார்த்து, உறவினரான ரஜினி பாராட்டுவாரா?
அடிக்கடி பாராட்டுவார். அடி படுங்க... வலிக்கும். எழுந்து நடங்க... மீண்டும் மீண்டும் எழுந்து நடங்க... என்பது தான் அவரது அறிவுரை.
* மகளிர் தினம் குறித்து...
மனதில் துணிச்சல், தைரியம் உள்ள பெண்களுக்கு 365 நாட்களும் மகளிர் தினங்களே. வாழ்த்துக்கள்!
தொடர்புக்கு: madhuarun1@gmail.com