இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தெலுங்குத் திரையுலகில் வட இந்திய ஹீரோயின்களுடனும் மற்ற ஹீரோயின்களுடனும் போட்டி போட்டு முன்னணியில் இருந்து கொண்டிருப்பவர் ரெஜினா கஸான்ட்ரா. அவருக்கும் தெலுங்கு நடிகரான சாய் தரம் தேஜுக்கும் இடையே காதல் தீவிரமடைந்திருப்பதாக டோலிவுட் வட்டாரங்களில் மீண்டும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. சாய் தரம் தேஜ் நாயகனாக அறிமுகமான 'பில்ல நுவ்வு லேனி ஜீவிதம்' என்ற படத்தில் அவருடன் ரெஜினா ஜோடி சேர்ந்து நடித்த போதே இருவருக்கும் காதல் பற்றிக் கொண்டதாகத் தெரிவிக்கிறார்கள். சாய் தரம் தேஜ், தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சீரஞ்சீவியின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ரெஜினாவை சாய் தரம் தேஜ் தன்னுடைய வீட்டிற்கு அழைத்துக் கொண்டுச் சென்று தன் அம்மாவிடமும் ஆசீர்வாதம் பெற்றதாகத் தெரிவிக்கிறார்கள். அவருடைய குடும்பத்தினரும் இந்தக் காதலுக்கு பச்சைக் கொடி காட்டிவிட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால், ரெஜினா இன்னும் சில காலம் சினிமாவில் நடித்துப் பெயர் வாங்கிய பிறகே திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருக்கிறாராம்.
தற்போது தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தில் ரெஜினா நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும், தமிழ், தெலுங்கிலும் பல புதுப்பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறதாம். அதனால்தான் திருமணத்தைத் தவிர்க்கிறார் என்றும் சொல்கிறார்கள்.
எத்தனையோ காதல் கிசுகிசுக்களைப் போல இதுவும் காணாமல் போய்விடுமா அல்லது கல்யாணத்தில் முடிந்து விடுமா என தெலுங்கு ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.