தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இரண்டு ஹீரோக்கள் நடிக்கும் படத்தைத் தயாரிப்பவர்கள் உண்மையில் பாவப்பட்டவர்கள் தான். ஒரு ஹீரோவுக்கு கூடுதலாக ஒரு காட்சி இருந்தால் போதும். இன்னொரு ஹீரோ முறுக்கிக் கொள்வார். அவரை சமாதானப்படுத்தினால் இவர் கோபித்துக் கொள்வார். இரண்டு ஹீரோக்களை வைத்து படம் எடுத்தால், இப்படி இரண்டு பக்க மத்தளமாக இடிபடுவதை தவிர்க்கவே முடியாது.
சமீபத்தில் இப்படி இடிபட்டவர் போக்கிரி ராஜா படத்தின் தயாரிப்பாளர். ஜீவா, சிபிராஜை வைத்து போக்கிரி ராஜா படத்தை ஆரம்பித்தார். இரண்டு பேருக்குமே அவர்தான் மானேஜர். எனவே கவனமாக இருவரையும் கையாண்டார். விநியோகஸ்தர் காஸ்மோ சிவா, போக்கிரி ராஜா படத்தை வாங்கி தமிழகம் முழுவதும் வெளியிட்டுள்ளார். அவர் படத்தை வாங்கிய பிறகு சிபிராஜுக்கு முக்கியத்துவம் கொடுக்க, இதை அறிந்து கடுப்பான ஜீவா, போக்கிரி ராஜா புரமோஷனை சிபிராஜை வைத்து நடத்திக்கொள்ளுங்கள் என்று சொல்லி முற்றிலும் புறக்கணித்துவிட்டாராம். அதுமட்டுமல்ல போக்கிரிராஜா படத்துக்காக போஸ்டர் தோரணம் ப்ளக்ஸ் எதுவுமே வேண்டாம் என தன்னுடைய ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி இருப்பதாக தகவல்.