'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விருது கிடைக்காமல் எழுந்த சர்ச்சை ஒருபக்கம் இருக்க, விருது வாங்கியவர் கூட சர்ச்சைக்கு திரி கிள்ளிய அதிசயத்தை கேரளா அரசு விருது அரங்கேற்றி வைத்துள்ளது. இதில் முதலில் சிக்கியது பிருத்விராஜின் 'என்னு நிண்டே மொய்தீன்' படம் தான்.. அந்தப்படத்தின் சிறந்த இசைக்காக விருதுபெற்ற ரமேஷ் நாராயண் என்பவர் இந்த விருது பிருத்விராஜூக்கான பதிலடி என்றார்.. காரணம் படத்தில் தான் எழுதிய ஏழு பாடல்களையும் அப்படியே வைக்கவிடாமல், இரண்டு பாடல்களை மட்டும் வைத்தால் போதுமென பிருத்விராஜ் தலையிட்டு தன்னை அவமானப்படுத்தினார் என்றும் அதற்கு படத்தின் இயக்குனர் ஆர்.எஸ்.விமல் எந்த மறுப்பும் சொல்லாமல் உடந்தையாக இருந்தார் என்றதும் அவர் காரணம் சொல்லியிருந்தார்..
ரமேஷ் நாராயணின் இந்த பேச்சுக்கு படத்தின் இயக்குனர் ஆர்.எஸ்.விமல் முதலில் பதில் சொல்லவேண்டாம் என்றுதான் நினைத்தாராம் ஆனால் உண்மை என்ன என்பது ரசிகர்களுக்கு தெரியவேண்டும் என்பதற்காக, இப்போது தானே முன்வந்து விளக்கம் கொடுத்துள்ளார் விமல்.. “படத்திற்காக நாங்கள் சொல்லாமலேயே, அதாவது இயக்குனரான என்னிடமும், தயாரிப்பாளரிடமும் கேட்காமலேயே அவராகவே ஏழெட்டு பாடல்களை போட்டுக்கொண்டால் அதற்கு நாங்களா பொறுப்பு.?. ஒரு படத்தில் எத்தனை பாடல்கள் வைக்கவேண்டும் என்பது இயக்குனரின் முடிவு. அதில் இவர் எப்படி தலையிட முடியும்..? அதேபோல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரனை பாட வைக்கலாம் என சொன்னதே பிருத்விராஜ் தான். ஆனால் இவர் என்னவோ, பிருத்விராஜ் தான் ஜெயச்சந்திரனை வேண்டாம் என கூறினார் என பொய்யான தகவலை கூறியுள்ளார்” என தனக்கும் பிருத்விராஜுக்கும் சேர்த்தே பதில் சொல்லியுள்ளார் ஆர்.எஸ்.விமல்.