ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கிராமத்திலிருந்து வெள்ளிந்திரி மனசோடு சினிமாவுக்கு வந்து இங்கு நிறைய சம்பாதித்து நிறைய ஏமாந்து போன கலைஞர்கள் நிறைய இருக்கிறார்கள். இதற்கு முன்பு பரவை முனியம்மா பற்றி நமது இணையதளத்தில் எழுதியிருந்தோம். அது பத்திரிகைகளிலும் வெளிவந்து பரவை முனியம்மாவுக்கு பலரும் உதவி செய்தார்கள். அரசும் உதவி செய்தது.
பரவை முனியம்மாவைப் போலவே சினிமாவில் நடித்தும், பாடியும் வந்தவர் கொல்லங்குடி கருப்பாயி. ஆண் பாவம் படத்தின் மூலம் பாண்டிய ராஜன் இவரை அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு ஆண்களை நம்பாதே, கபடி கபடி, கோபாலா கோபாலா உள்பட பல படங்களில் நடித்தார். தமிழ அரசு அவருக்கு கலைமாமணி விருதும் வழங்கியது.
தற்போது சினிமா வாய்ப்பு இல்லாத கருப்பாயி மதுரை அருகே உள்ள தனது கொல்லங்குடி கிராமத்தில் வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறார். நலிந்த கலைஞர்களுக்கு அரசு வழங்கும் மாதம் 1500 ரூபாய்தான் அவருக்கு இருக்கும் ஒரே வருமானம். முன்பு வயல்வேலைக்கு சென்று கொண்டிருந்தார் இப்போது வயது 80ஐ தாண்டிவிட்டதால் அவரால் வேலை செய்ய முடியவில்லை. ரேஷன் கடையும், அரசு ஆஸ்பத்திரியும், 1500 ரூபாய் பணமும் கொல்லங்குடி கருப்பாயியை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. ஆனால் அவர் பாடிய பாடல் கேசட்டுகள் தமிழ்நாடு முழுவதும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அந்த வருமானம் யாருக்கோ சென்று கொண்டிருக்கிறது.