டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
லிங்குசாமி இயக்கிய வேட்டை படத்திற்கு பிறகு தமிழில் சரியான படவாய்ப்புகள் இல்லாததால், இந்தி, ஆங்கில படங்களில் நடித்து வந்தார் மாதவன். அதையடுத்து, துரோகி பட டைரக்டர் சுதா சொன்ன இறுதிச்சுற்று கதையில் நடிக்க கமிட்டனார். ஆனால் அந்த படம் நடந்து கொண்டிருந்தபோதே ஒரு இந்தி படத்தில் நடிப்பதற்காக சென்று விட்டார். அதனால் கிட்டத்தட்ட 3 வருடங்களுக்குப்பிறகுதான் அந்த படம் திரைக்கு வந்தது. குத்துச்சண்டையை மையப்படுத்தி வெளியான அந்த படம் எதிர்பாராத பெரிய வெற்றி பெற்றது. ஆனபோதும், அப்படத்தில் கோட்சாக நடித்த மாதவனை விட, குத்துச்சண்டை வீரராக நடித்திருந்த ரித்திகா சிங்கின் நடிப்பே பேசப்பட்டது.
மேலும், அதையடுத்து தமிழில் தொடர்ந்து நடிக்க ஆசைப்பட்ட மாதவன், இனிமேல் தமிழுக்குத்தான் முதலிடம் கொடுப்பேன் என்று கூறினார். ஆனபோதும், தற்போது ஒரேயொரு தமிழ்ப்படத்தில்தான் அவர் கமிட்டாகியிருக்கிறார். அதோடு, முன்பெல்லாம் புதுமுக டைரக்டர்களுக்கு சரியான ரெஸ்பான்ஸ் கொடுக்காமல் இருந்து வந்த மாதவன், இப்போது யாராவது புதுமுக டைரக்டர்கள் தன்னிடம் கதை சொல்ல தொடர்பு கொண்டால், கதையை கேட்டு விட்டு, நல்ல புருடியூசராக பிடித்து விட்டு வாருங்கள். நான் கண்டிப்பாக கால்சீட் தருகிறேன் என்று அவர்களுக்கு நம்பிக்கை கொடுத்து அனுப்புகிறாராம்.