'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாரதிராஜாவிடம் உதவியாளராகப் பணியாற்றிய பாரதி கிருஷ்ணகுமார் இயக்கியிருக்கும் என்று தணியும் என்ற படத்தின் இசை வெளியீடு சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. இயக்குனர்கள் பாரதிராஜா, பி.வாசு, நடிகர்கள் ஜெயம் ரவி, சந்தானம் உள்ளிட்ட பலர் கொண்ட இந்த இசை நிகழ்ச்சியில் பாரதிராஜா, சிவாஜிகணேசன் இணைந்த, தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த படமான முதல் மரியாதை படத்தில் அவர்களுக்கிடையே நடைபெற்ற ஒரு சுவாரசியமான சம்பவத்தைப் பற்றி பலரும் ரசிக்கும் விதத்தில் சுவாரசியமாகச் சொன்னார் இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார்.
என்று தணியும் படத்தில் நடிக்கும் நடிகர்கள் யாரும் ஒப்பனை இல்லாமல் நடிக்க, இயற்கை வெளிச்சத்தில் தான் படத்தையும் படமாக்கியிருக்கிறார்களாம். அதைப் பற்றி பேசும் போதுதான் முதல் மரியாதை படத்தின் அந்த சுவாரசிய நிகழ்வும் அவரால் பகிரப்பட்டது.
“ஒப்பனை இல்லை என்று சொன்ன போதும் இந்தப் படத்தில் நடிப்பதற்கு நான்கு பேர் கிடைத்தார்கள். முதல் நாள் படப்பிடிப்பில், லேசாக மேக்கப் பூசிக் கொண்டு வந்தார்கள். அதை அப்போதே கழுவி விட வேண்டும் என்று சொன்னேன், ஒப்புக் கொண்டார்கள். கழுவி விட்டுத்தான் நீ நடிக்க வேண்டும் என்று சொல்ல எனக்கு தைரியம் எங்கிருந்து வந்தால், முதல் மரியாதை படத்தில் நடிக்க வந்த போது, ஒப்பனை அதிகமாக இருக்கிறது என்று சொல்லி சிவாஜிகணேசனின் மேக்கப்பைக் குறைக்கச் சொன்னார் எங்களது டைரக்டர்.
சிவாஜி கொஞ்சம் குறைத்தார், எங்க டைரக்டர் இன்னும் கொஞ்சம் என்றார். அவரும் குறைத்து, இப்போ என்றார், டைரக்டர், இன்னும் என்றார். அவர் மீண்டும் குறைக்க கேமராக வழியாகப் பார்த்து விட்டு இன்னும் கொஞ்சம் என்றார். டவலை வாங்கிய சிவாஜி, அப்படியே முகத்தில் தேய்த்துக் குறைத்துவிட்டு, இப்போ என்றார், டைரக்டர் ஓகே என்றார். அப்புறம் ஷாட் எடுக்க ஆரம்பிச்சதும் சிவாஜிகணேசனைப் பார்த்து திரும்புங்க எனச் சொன்னாராம். சிவாஜி சார் திரும்பிய உடனே டைரக்டர் கட், கட் என்றாராம். சிவாஜி, என்ன ? எனக் கேட்க, நீங்க திரும்பும் போது வலது புருவம் மேல போகுது எனச் சொல்லியிருக்கிறார். போனா என்ன ? என சிவாஜி கேட்க, டைரக்டரோ போகக் கூடாது என்கிறார். புதுசா இருக்கிறவங்களைப் பார்த்தாலே புருவம் மேல போகும், தெரிஞ்சவங்களைப் பார்க்கும் போது ஏன் மேல போகணும் என டைரக்டர் கேட்டிருக்கிறார்.
மீண்டும் ஷாட் எடுக்க, சிவாஜி திரும்பவும் திரும்பினார். மீண்டும் டைரக்டர் கட், எட் எனச் சொல்ல, சிவாஜியோ திரும்பவும் என்னப்பா எனக் கேட்டிருக்கிறார். இப்ப இடது பக்க புருவம் மேல போகுது டைரக்டர் சொல்கிறார். என்ன செய்யச் சொல்ற என சிவாஜி மீண்டும் கேட்க உங்களுக்குத் தெரிஞ்ச ஆள் கூப்புடறாங்க, சாதாரணமா திரும்பிப் பாருங்க, என இயக்குனர் சொல்கிறார். மீண்டும் அந்தக் காட்சி எடுக்கப்பட நான்காவது டேக்ல சிவாஜி சாதாரணமாகத் திரும்பிப் பார்க்க அது ஓகே ஆகிறது.
பின்னர் டைரக்டர் பாரதிராஜாவிடம் வந்த சிவாஜி கணேசன், நடிக்க வேணாம்னு சொல்றியா... எனச் சிரித்துக் கொண்டே கேட்க, இயக்குனரும் சிரித்துக் கொண்டே “ஆமா” எனச் சொல்ல, பதிலுக்கு சிவாஜிகணேசன், “அடப்பாவி, இப்படி எல்லா டைரக்டரும் சொல்லியிருந்தாங்கன்னா, ஆயிரம் படம் நடிச்சிருப்பேனடா” என பலமாகச் சிரித்தாராம் என என்று தணியும் படத்தின் இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார் அந்த முதல் மரியாதை படப் பிடிப்பு நிகழ்வை பலத்த கைதட்டல்களுக்கிடையே சொல்லி முடித்தார்.