இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
சின்னாஸ் பழனிச்சாமி இயக்கியுள்ள படம் மியாவ். ராஜா, காயத்ரி என்ற புதுமுகங்கள் நடித்துள்ள இப்படம் ஒரு பூனை பழிவாங்கும் கதையில் உருவாகியிருக்கிறது. செல்பி என்கிற பெர்சியன் ரக பூனைதான் இந்த படத்தில் சிலரை சஸ்பென்சாக பழிவாங்குகிறதாம். அந்த பூனை பழி வாங்கும் காட்சிகள் சம்பந்தப்பட்ட சிஜி ஒர்க் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. மேலும், வின்சென்ட் அடைக்கலராஜ் தயாரித்துள்ள மியாவ் படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறதாம்.
இந்நிலையில், சமீபத்தில் இப்படம் சம்பந்தப்பட்ட விளம்பரங்களை முடுக்கி விட்டுள்ள நிலையில், மார்ச் 19-ந்தேதி ஆடியோ விழாவை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர். அந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொள்கிறார்களாம். அந்த விழாவின்போது செல்பி என்ற பெர்சியன் ரக பூனை மிரட்டியுள்ள சில காட்சிகளையும் திரையிட்டு படத்திற்கு பரபரப்பு கூட்டப்போகிறார்களாம்.