ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
யுவன் ஷங்கர் ராஜா, சில வருடங்களுக்கு முன்னர் வரை தமிழ்த் திரை இசை உலகில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவராக இருந்தார். 2013ல் வெளிவந்த 'தங்க மீன்கள்' படத்திற்குப் பிறகு அவருடைய இசையில் வெளிவந்த படங்கள் இசையிலும் சரி, வியாபார ரீதியாகவும் சரி பெரிய வெற்றியைப் பெறவில்லை. அது, யுவனுக்கு ஒரு பின்னடைவாகவும் இருந்தது. அதிகப் படங்களை ஒப்புக் கொள்ளாமலும் இருந்தார். அதற்கு அவருடைய தனிப்பட்ட சில காரணங்களும் இருந்தன. கடந்த வருடம் யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து 'மாசு என்கிற மாசிலாமணி, யட்சன்' ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே வெளிவந்தன. ஆனால், அவையும் தோல்வியடைந்தன.
தற்போது பல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் யுவனை நோக்கி படையெடுத்து வருகின்றனர். அவருக்கென இருக்கும் தனித் தன்மையும், அவர் இதற்கு முன் கொடுத்த பல இனிமையான பாடல்களும் அவரை ரசிகர்கள் மனதில் இன்னமும் இருக்க வைத்துக் கொண்டிருக்கிறது. 'தரமணி' படத்தின் பாடல்கள் வெளியான பிறகு ரசிகர்கள் மீண்டும் யுவனைக் கொண்டாடுவார்கள் என்று அவருடைய வட்டாரங்களில் இருந்து தகவல் வெளிவந்துள்ளது.
காதலர் தினத்தன்று வெளியான 'யாக்கை' படத்தின் சிங்கிள் டிராக் பாடலான 'நீ...' பாடல் யுவன் ரசிகர்களை மீண்டும் கொண்டாட வைத்தது. அடுத்து 'பேரன்பு, தர்மதுரை' ஆகிய படங்களும் யுவனின் மீள் வருகையை மீண்டும் எதிர்பார்க்க வைத்துள்ளன. அதோடு சமீபத்தில் ராகவன் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படமும், 'சென்னை 28' படத்தின் இரண்டாவது பாகமும் அவருடைய புதிய படங்களின் பட்டியலில் சேர்ந்துள்ளன. இந்த இன்னிங்சை யுவன்ஷங்கர் ராஜா நின்று நிலைத்து ஆடுவார் என்று அவரது ரசிகர்களும் எதிர்பார்த்துள்ளனர்.