தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! |
சமீபத்தில் மலையாள நடிகர் ராஜேஷ் பிள்ளை தனது 41வது வயதில் மரணம் அடைந்த அதிர்ச்சியைவிட, அவர் அளவுக்கதிகமாக குளிர்பானம் குடித்ததால் தான் கல்லீரல் பாதிப்புக்கு ஆளாகி மரணம் அடைந்துள்ளார் என அவரது நண்பர் ஒருவர் குறிப்பிட்டு இன்னொரு அதிர்ச்சியை கிளப்பினார். ஆனால் இதை முற்றிலுமாக மறுத்துள்ளார் நடிகரும், டாக்டருமான ரோனி டேவிட்.
இவர் ராஜேஷ் பிள்ளையின் சமீபத்திய படமான 'வேட்ட' மற்றும் நிவின்பாலியின் 'ஆக்சன் ஹீரோ பிஜூ' என இரண்டு படங்களிலுமே போலீஸ் அதிகாரியாக மிக முக்கியமான வேடத்தில் நடித்து ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர். அத்துடன் 'வேட்ட' படத்தின்போது ராஜேஷ் பிள்ளையுடன் நெருங்கி பழகும் வாய்ப்பை பெற்ற வரும் கூட. இவர் ராஜேஷ் பிள்ளையின் மரணத்தைப்பற்றி சொல்லப்படும் உண்மைக்கு புறம்பான செய்திகளை மறுத்துள்ளார்.
“தினசரி 30 கேன் பெப்சி குடிக்க ராஜேஷ் பிள்ளை என்ன முட்டாளா..? ஒரு கேன் 250மிலி என வைத்துக்கொண்டாலும் தினமும் 7.5 லிட்டர் குளிர்பானத்தை யாராவது குடிக்க முடியுமா..? அவரது தாயார் சமீபத்தில் கல்லீரல் பாதிப்பால் தான் மரணமடைந்தார். அது பரம்பரை வியாதியாக இவரையும் பாதித்து இருந்தது. ராஜேஷ் பிள்ளையின் ஒய்வு இல்லாத வேலையும் அதனால் உணவையும் மருந்தையும் சரியான நேரத்தில் எடுத்துக்கொள்ள தவறியதும் இதற்கு இன்னும் உப காரணங்கள். 'வேட்ட' படத்தின் கடைசி நேர எடிட்டிங், மிக்சிங் பணிகளுக்காக இவர் அடிக்கடி திருவனந்தபுரம் அலைந்ததை தவிர்த்து சிகிச்சையில் தீவிரம் காட்டியிருக்கலாம். ஆனால் சினிமா மீதான அவரது ஆர்வம் அதற்கு அவருக்கு இடம் கொடுக்காமல் போய்விட்டது” என கூறியுள்ளார் ரோனி டேவிட்.