தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரபல பாடகர் மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரன், பூவெல்லாம் உன் வாசம் படத்தில் வில்லனாக அறிமுகமானார். அதன்பிறகு பல படங்களில் நடித்தவர் சரியான வாய்ப்புகள் இல்லாமல் குடும்பத்தினருடன் மலேசியாவில் செட்டிலாகிவிட்டார். தற்போது மீண்டும் நடிக்க வந்திருக்கும் அவர் வதந்திகளால் தான் நான் வாய்ப்புகளை இழந்தேன். என்று வருத்தத்துடன் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது: பிறப்பிலேயே சினிமா வரம் பெற்று வந்த நான். எனக்கென ஒரு அடையாளத்தை தமிழ் சினிமாவில் உருவாக்க நினைத்தேன். பல நெகட்டிவ் கதாபாத்திரல் நடித்து ஒரு நடிகனாக என்னை நிலைநிறுத்திக் கொண்டேன். ஆனால் சமீபகாலமாக சினிமா வாய்ப்புகள் குறைந்துவிட்டது, அதன் காரணத்தையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. நான் தமிழ் நாட்டிலும் எனது குடும்பம் மலேசியாவிலும் இருந்ததுதான் எனக்கு பின்னடைவாக இருந்தது. அடிக்கடி நான் என் குடும்பத்தை பார்க்க மலேசியா சென்றுவிடுவதாகவும் இதனால் படப்பிடிப்பில் சரியாக கலந்து கொள்வதில்லை என்றும் சிலர் வதந்திகளை கிளப்பிவிட்டிருக்கிறார்கள். ஆனால் இது முற்றிலும் பொய்.
2013ம் ஆண்டு ”விழா” என்ற படத்தில் நடித்தேன். அந்த படத்தில் நடிக்க துவங்கியதிலிருந்து படத்தில் டப்பிங் பேசி முடிக்கும்வரை நான் மலேசியாவிற்கு செல்லவில்லை. படத்தை முடித்து கொடுத்தபின்தான் சென்றேன். சினிமா வாய்ப்புகள் குறைந்ததும் நான் மலேசியாவிலேயே தங்கிவிட்டேன், அதற்கும் சிலர் இனி யுகேந்திரன் இந்தியா வரமாட்டாராம் என்றெல்லம் கதை கட்டிவிட்டுள்ளார்கள். இதோ நான் என் தமிழ் சினிமாவுடன் மீண்டும் இணைய வந்துவிட்டேன். இரண்டாவது இன்னிங்க்ஸ் என்பதால் பணத்துக்காக எல்லா கதைகளையும் ஒப்புக் கொள்ளாமல் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பேன் என்று நடிகர் யுகேந்திரன் கூறினார்.