பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
புது நெல்லு புது நாத்து, சின்ன கவுண்டர், திருமதி பழனிச்சாமி, சோலையம்மா, இந்தியன் என பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர் சுகன்யா. பெரும்பாலும் குடும்பப்பாங்கான கதைகளிலேயே நடித்து வந்த அவர், சமீபகாலமாக கேரக்டர் நடிகையாக பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, ஜில்லுன்னு ஒரு காதல், எல்லாம் அவன் செயல், அழகர்மலை, என்னமோ நடக்குது, செல்வந்தன் போன்ற படங்களில் குறிப்பிடத்தக்க கேரக்டர்களில் நடித்தார் சுகன்யா.
இந்த நிலையில், தற்போது கடல் கெளதம் நடித்து வரும் முத்துராமலிங்கம் படத்தில் அவருக்கு அம்மாவாக நடிக்கிறார் சுகன்யா. கதைப்படி கார்த்தியின் மனைவியாக நடித்து வரும் சுகன்யா, அப்படம் திருநெல்வேலி கதையில் உருவாகி வருவதால் பக்கா நெல்லை பெண்ணாகவே மாறி நடித்துக்கொண்டிருக்கிறாராம். குறிப்பாக, அங்குள்ள பெண்கள் சேலை உடுத்திருப்பது தொடங்கி அவர்கள் எந்த மாதிரியாக கைகளை அசைத்து முகபாவணை செய்து பேசுவார்கள் என்பதையெல்லாம் பக்காவாக ரிகர்சல் பார்த்து நடித்து வருகிறாராம்.
மேலும், முத்துராமலிங்கம் படத்தில் அம்மா-மகன் செண்டிமென்ட் காட்சிகளில் கண்கலங்க வைத்திருக்கும் சுகன்யாவுக்கு வெயிட்டான வேடம் என்பதால் இந்த படத்திற்கு பிறகு அம்மா வேடங்களில் அவர் ஒரு பெரிய ரவுண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சொல்கிறார்கள்.