தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கமல்ஹாசனின் கனவு படமான மருதநாயகம் 1997-ல் தொடங்கப்பட்டது. இந்த படத்தின் கதையை மறைந்த எழுத்தாளர் சுஜாதாவோடு இணைந்து எழுதிய கமல், தானே தயாரித்து, இயக்கி நடித்தார். அப்படத்தின் பூஜையை இங்கிலாந்து ராணி எலிசபெத் சென்னை வந்து தொடங்கி வைத்தார். ஆனால், பைனான்ஸ் பிரச்சினை காரணமாக அப்படத்தை நிறுத்தி வைத்த கமல், இப்போது வரை தொடங்கவில்லை. விரைவில் மருதநாயகத்தை தொடங்குவார் என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சமீபத்தில் சென்னையில் இளையராஜாவுக்கு நடந்த பாராட்டு விழாவின்போது, இளையராஜா, கமல் இருவரும் இணைந்து மருதநாயகம் படத்திற்காக உருவாக்கிய ஒரு பாடலை மேடையில் பாடினர். அதோடு அப்பாடலை கமல் ஏற்கனவே படமாக்கி விட்டதால் அதன் விசுவலையும் திரையிட்டு அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். பொறந்தது பனையூரு மண்ணு, மருதநாயகம் என்பது பேர்களில் ஒண்ணு. வளர்ந்தது பகையோட நின்னு, இங்கு தொடங்குது தொடங்குது சரித்திரம் ஒண்ணு -என்று அப்பாடலின் வரிகள் எழுதப்பட்டிருந்தன.