டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
'சென்னை 28' படத்தின் இரண்டாம் பாகம் தனக்கு இரண்டாவது இன்னிங்ஸ் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார் இயக்குனர் வெங்கட் பிரபு. 2007ல் வெளிவந்த 'சென்னை 28' படம் எந்த ஒரு பெரிய நட்சத்திரங்கள் இல்லாமல் வெளிவந்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ரசிகர்களை ரசிக்க வைத்து பெரிய வெற்றியைப் பெற்றது. அந்தப் படத்திற்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கிய “சரோஜா, கோவா” ஆகிய படங்கள் வெற்றி பெறவில்லை. இருந்தாலும் அஜித்தை வைத்து அவர் இயக்கிய 'மங்காத்தா' அதிரடி வெற்றிப் படமாக அமைந்தது. அதனால் ஸ்டார் இயக்குனர் என்ற அளவிற்குக் கூட வெங்கட் பிரபு உயர்ந்தார்.
இருந்தாலும் அடுத்து கார்த்தி நடித்த 'பிரியாணி', சூர்யா நடித்த 'மாசு என்கிற மாசிலாமணி' படங்கள் அவரை கீழிறக்கி விட்டது. அதன் பின் அவரை எந்த நடிகரும் நாடவில்லை என்றே கோலிவுட் வட்டாரங்களில் சொன்னார்கள். அதனால் 'சென்னை 28' படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கத் திட்டமிட்டார். அதற்கும் தயாரிப்பாளர்கள் கிடைக்காததால் தானே சொந்தமாக பட நிறுவனம் ஆரம்பித்து தயாரித்து இயக்கவும் ஆரம்பித்துவிட்டார்.
நேற்று மாலை 'சென்னை 28' படத்தின் இரண்டாவது இன்னிங்ஸ் என்று சொல்லி படத்தின் முதல் மோஷன் போஸ்டரை வெளியிட்டார். படத்திற்கு இசை யுவன்ஷங்கர் ராஜா என்பது மட்டும் உறுதியாகியுள்ளது. முதல் பாகத்தில் நடித்த நடிகர்களே நடிப்பார்களா, அல்லது வேறு நடிகர்களா என்பது இன்னும் தெரியவில்லை. ஆனாலும், முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் பலரும் வெங்கட் பிரபுவின் டிவீட்டை உடனுக்குடன் ரிடிவீட் செய்து தங்களது பாசத்தை வெளிப்படுத்திக் கொண்டார்கள்.