பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
'ஆழ்வார்பேட்டை ஆண்டவா' என கமல் ரசிகர்கள் அவரைப் பாராட்டிக் கொண்டிருந்தாலும் தமிழில் டைப் அடித்து டிவிட்டரில் பதிவிடும் போது, அது கமல்ஹாசனாக இருந்தாலும் குற்றம் குற்றமே என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. இந்தியத் திரையுலகில் பலப் பல புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு வந்த கமல்ஹாசன் தமிழில் டைப் அடிக்கும் மிக எளிய விஷயத்தை இன்னும் கற்றுக் கொள்ளாமல் இருப்பது ஆச்சரியமளிக்கிறது. அவர் பேசுவதைப் பற்றிப் பலர் புரியாமலேயே பேசுவார் என கிண்டலடிப்பது வழக்கம். அந்த விதத்தில் தற்போது அவரது பதிவுகளை கிண்டலடிப்பதற்கு முன் கமல்ஹாசன் மாற்றிக் கொள்வது நல்லது.
டிவிட்டரில் கடந்த மாதம் இணைந்த போது கமல்ஹாசன் முதலில் பதிவிட்ட தமிழ் பதிவில் தவறு வந்ததற்கு 'என் தாந்தோன்றிச் செயல்படும் கீboardஐ மன்னிக்கவும்' என தப்பித்தார். இன்று எழுத்தாளர் சுஜாதாவின் நினைவு தினத்தையொட்டி அவரைப் பற்றி கமல்ஹாசன் பதிவிட்டதில் வந்த எழுத்துப் பிழைகளை 'டைப்போ' தவறுகள் எனச் சொல்லி மீண்டும் ஒரு முறை அவர் தப்பித்துக் கொள்ளக் கூடாது. 'திகில்' என்பதற்கு 'தகில்' என்றும், 'அறியாமல்' என்பதற்கு 'அரியாமல்' என்றும், 'பெரியவர்' என்பதற்குப் 'பேரியவர்' என்றும் பதிவிட்டிருப்பதைப் பார்த்தால் கோபம் கொப்பளிக்கத்தான் செய்யும்.
ஒன்று உங்களுக்காக டைப்பிங் செய்து கொடுப்பவரை மாற்றுங்கள், அல்லது உங்களுக்காக எழுதிக் கொடுப்பவரை மாற்றுங்கள், அல்லது நீங்களே உங்கள் கைகளால்தான் டைப் செய்கிறீர்கள் என்றால் நல்லதொரு எளிய மென் பொருளை பயன்படுத்துங்கள். அதுவரை தமிழில் தவறுடன் எந்த பதியைம் போட்டு விடாதீர்கள்... உங்கள் பதிவுகளை பதிவேற்றும் முன் கொஞ்சம் கவனியுங்கள் கமல்ஹாசன்.