போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் |
மேகா, கத்துக்குட்டி, புதிதாக ஆனந்தம் புதிராக ஆரம்பம், நவரசதிலகம் ஆகிய படங்களில் நாயகியாக நடித்துள்ள சிருஷ்டி டாங்கே, பல படங்களில் கேரக்டர் ரோல்களிலும் நடித்துள்ளார். அதோடு, நான் நாயகி, அதனால் பேடு இமேஜை உருவாக்கும் கேரக்டர்களில் நடிக்க மாட்டேன் என்றும் அவர் வட்டம் போட்டுக்கொண்டு நடித்ததில்லை. எந்தமாதிரியான கேரக்டர்களில் நடிக்கவும் தான் தயாராக இருப்பதாகத்தான் இப்போது வரை கூறி வருகிறார். மேலும், அவரது கைவசம் தர்மதுரை, ஜித்தன்-2, அச்சமின்றி என பல படங்கள் உள்ளன.
இந்நிலையில், அடுத்தடுத்து நடிப்பதற்கு அவர் பேசிக்கொண்டிருந்த சில படங்கள் தற்போது கைநழுவிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாம். இதனால் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறார் சிருஷ்டி டாங்கே. காரணம், அவர் நடித்ததில் இதுவரை எந்த படமும் வெற்ற பெறவில்லை. மேகா, கத்துக்குட்டி படங்களுக்குப்பிறகு அவர் அதிகமாக எதிர்பார்த்த படம் நவரசதிலகம். மா.கா.பாவுடன் நடித்த இந்த படமும் சிருஷ்டிக்கு வெற்றியாக அமையவில்லை. அதனால்தான் புதிய படங்களுக்கான பேச்சுவார்த்தையில் இருந்தவர்கள் பின்வாங்கி விட்டார்களாம். அதோடு சிலர் ராசியில்லாத நடிகை என்றும் சிருஷ்டியின் காதுபடவே சொல்கிறார்களாம்.
இதனால், இனிமேலும் தமிழையே நம்பிக்கொண்டிருந்தால் சரிப்பட்டு வராது என்று அடுத்தகட்டமாக தெலுங்கு படங்களில் நடிப்பதற்கான படவேட்டையில் இறங்கப்போவதாகவும் தனது அபிமானிகளிடம் கூறி வருகிறார் சிருஷ்டி டாங்கே.