இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இன்னும் உறுதிப்படுத்தப்படாமலும், அதேசமயம் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து எந்த மறுப்பும் வெளியாகமலும் உலவிக்கொண்டு இருக்கும் செய்திதான் மணிரத்னத்தின் புதிய படத்தில் கதாநாயகனாக கார்த்தி நடிப்பதும் அவருக்கு ஜோடியாக 'பிரேமம்' புகழ் சாய் பல்லவி நடிப்பதும். இந்தப்படத்தில் துல்கர் சல்மான் நடிப்பதாக இருந்து பின்னர் கால்ஷீட் பிரச்சனையால் அவர் ஒதுங்கிக்கொண்ட தகவல் கூட கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்பட்டது தான்.. ஆனால் துல்கருக்காவே எழுதப்பட்ட இந்த கதையில் கார்த்தி நடிப்பது என்பது இனிமேல் உறுதியான தகவலாக வெளிப்படும் என நம்பலாம்.
அதேசமயம் கதாநாயகியாக சாய் பல்லவி நடிப்பது உறுதிதான் என்று சொல்லப்படுகிறது.. காரணம் இந்தப்படத்திற்கு கிட்டத்தட்ட தமிழுக்கு புதுமுகமாக அதேசமயம் தமிழ் பேசத்தெரிந்த பெண்ணாக இருந்தால் நன்றாக இருக்கும் என மணிரத்னம் நினைத்தாராம்.. அந்த சமயத்தில் தான் அவரது மனைவி நடிகை சுஹாசினி, மலையாளத்தில் வெளியான 'பிரேமம்' படத்தை பார்த்துள்ளார். படத்தில் மலர் டீச்சராக வந்து ரசிகர்களை கிறங்கடித்த சாய் பல்லவி, சுஹாசினியையும் கவர்ந்ததில் ஆச்சர்யம் என்ன இருக்கப்போகிறது. அதன் பின் தான் தனது கணவரின் படத்திற்கான புது ஹீரோயின் தேடலை அறிந்து சாய் பல்லவியை பற்றி கூறி அவர்தான் பொருத்தமாக இருப்பார் என வாதாடினாராம் சுஹாசினி. மணிரத்னமும் சாய் பல்லவியை வரவழைத்து ஸ்க்ரீன் டெஸ்ட் எடுத்து பார்த்ததில் அவருக்கும் திருப்தியாம். அதன்பின் தான் அவரை நாயகியாக ஒகே செய்தாராம் மணிரத்னம்.