'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நயன்தாரா நடித்த மாயா படத்தை தொடர்ந்து பொட்டன்சியல் ஸ்டூடியோ தயாரிக்கும் படம் 'மாநகரம்'. குறும்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். ஹாலிவுட்டில் பயன்படுத்தப்படும் ஹைபர்லிங் டைப்பிலான திரைக்கதையில் தயாராகிறது. அதாவது ஒரே படத்தில் நான்கு கதைகள் இருக்கும், அந்த கதைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்கும். ஆனால் கேரக்டர்கள் சந்தித்து கொள்ள மாட்டார்கள், அந்த நான்கு பேராக வழக்கு எண் ஸ்ரீ, சந்தீப் கிஷன், சார்லி, முனீஷ்காந்த் நடிக்கிறார்கள். ரெஜினா ஹீரோயின், இவர் மட்டும் நான்கு கதைக்குள்ளும் வந்து செல்வாராம்.
பல்வேறு கனவுகளுடன் சென்னைக்கு வரும் இந்த நான்கு பேரையும் சென்னை எப்படி வரவேற்கிறது. வாழ வைக்கிறதா, வீழ்த்துகிறதா என்பதுதான் கதை. செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார், ஜாவித் இசை அமைக்கிறார். இதன் தொடக்கவிழா நேற்று நடந்தது. இயக்குனர்கள் பேரரசு, சமுத்திரகனி, கார்த்திக் சுப்புராஜ், சித்ரா லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.