சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
நயன்தாரா நடித்த மாயா படத்தை தொடர்ந்து பொட்டன்சியல் ஸ்டூடியோ தயாரிக்கும் படம் 'மாநகரம்'. குறும்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். ஹாலிவுட்டில் பயன்படுத்தப்படும் ஹைபர்லிங் டைப்பிலான திரைக்கதையில் தயாராகிறது. அதாவது ஒரே படத்தில் நான்கு கதைகள் இருக்கும், அந்த கதைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்கும். ஆனால் கேரக்டர்கள் சந்தித்து கொள்ள மாட்டார்கள், அந்த நான்கு பேராக வழக்கு எண் ஸ்ரீ, சந்தீப் கிஷன், சார்லி, முனீஷ்காந்த் நடிக்கிறார்கள். ரெஜினா ஹீரோயின், இவர் மட்டும் நான்கு கதைக்குள்ளும் வந்து செல்வாராம்.
பல்வேறு கனவுகளுடன் சென்னைக்கு வரும் இந்த நான்கு பேரையும் சென்னை எப்படி வரவேற்கிறது. வாழ வைக்கிறதா, வீழ்த்துகிறதா என்பதுதான் கதை. செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார், ஜாவித் இசை அமைக்கிறார். இதன் தொடக்கவிழா நேற்று நடந்தது. இயக்குனர்கள் பேரரசு, சமுத்திரகனி, கார்த்திக் சுப்புராஜ், சித்ரா லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.