பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
கன்னட மொழியில் ஒளிபரப்பாகி வரும் சூர்யா டிவியில் நான்கு ஆண்டுகளாக செய்தி வாசிப்பாளராக இருந்து வருபவர் ரெஜினா. இவர் தற்போது தமிழில் களத்தூர் கிராமம், கொம்புத்தேன் ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இந்த படங்களில் நடிப்பதற்காக செய்தி வாசிப்புக்கு மூன்று மாதங்களாக லீவு போட்டிருப்பதாக சொல்கிறார் ரெஜினா.
சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்தது குறித்து அவர் கூறுகையில், எனது சொந்த ஊர் பெங்களூர். பள்ளியில் நடித்தபோதே பரதநாட்டியம், குச்சிப்புடி, மேற்கத்திய நடனம் என பலவகையான நடனங்களை பயிற்சி எடுத்தேன். பின்னர் சூர்யா சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. கடந்த நான்கு ஆண்டுகளாக செய்தி வாசிப்பாளராக இருந்து வருகிறேன். அதோடு சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையும் எனக்கு இருந்து வந்தது. அதனால் தமிழில் அறிமுகமானால் பெரிய அளவில் புகழ் பெறலாம் என்பதால் முயற்சி எடுத்தேன். அதன்விளைவாக களத்தூர் கிராமம், கொம்புத்தேன் என்ற இரண்டு படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் களத்தூர் கிராமம் படத்தில் கிஷோருடன் நடித்திருக்கிறேன்.
அதையடுத்து கொம்புத்தேன் படத்தில் நடிக்கிறேன். வெள்ளைச்சாமி இயக்கும் இந்த படத்தை செந்தில் தயாரித்திருக்கிறார். நவீன் இசையமைக்க, தாமரை பாடல்கள் எழுதியுள்ளார். இந்த இரண்டு படங்களிலுமே ஹோம்லியான வேடங்களில் நடித்தபோதும் மாடர்ன் மற்றும் மிதமான கிளாமர் ஹீரோயினாக நடிக்கவும் தயாராக இருக்கிறேன் என்று கூறும் ரெஜினா, இன்னும் சில படங்களில் நடிக்கவும் கதை கேட்டுள்ளாராம். மேலும், இந்த படங்கள் வெளியாகி வெற்றி பெற்று விட்டால் முழுநேர நடிகையாகி விடுவாராம். ஒருவேளை எதிர்பார்த்த ஹிட் கிடைக்காதபட்சத்தில் மீண்டும் சேனல் செய்தி வாசிப்பாளராக தொடர்வாராம். அதுவரைக்கும், சேனலுக்கு லீவு போட்டபடியே சினிமாவில் நடிப்பை தொடரப்போகிறாராம் ரெஜினா.