பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது |
''ஜிகரு ஜிகரு ஜிகரு... ஜிக்கு ஜிகரு ஜிகரு... ராசாத்தி ராசாத்தி போகாதே சூடேத்தி...'' என, ரஜினி முருகன் படத்தில் இசையமைப்பாளர் இமான் இசையில் பரபரப்பான குத்துப் பாட்டை பாடி பிரபலமாகியுள்ளார் பின்னணி முன்னணி பாடகர் திவாகர்.
இனி இவரை திவாகர் என்று சொல்வதை விட 'ஜிகரு ஜிகரு திவாகர்' என்று சொன்னால் மிகப் பொருத்தமாக இருக்கும். திரைவானில் இசை நட்சத்திரமாய் ஜொலிக்கும் இவர் தன் இசைப் பயணம் குறித்து மனம் திறக்கிறார். '' என் சொந்த ஊர் சென்னை. கல்லுாரியில் பி.சி.ஏ., படிக்கும் போது பல மேடை நிகழ்ச்சிகளில் பாடியுள்ளேன்.
படிப்பை முடித்த பின், குடும்ப வறுமை காரணமாக தொடர்ந்து பாடும் வாய்ப்பு தேட முடியாமல், வேலைக்கு சென்றேன். கிடைக்கும் நேரத்தில் மேடை நிகழ்ச்சியில் பாடுவேன். 100 ரூபாய் கொடுப்பார்கள். பின்னனி பாடகர்
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தான் என் ரோல் மாடல், இவர் பாடிய 'உன்னால் முடியும் தம்பி தம்பி' பாடலை தான் முதன் முதலில் மேடையில் நான் பாடினேன்.
என்னால் முடியும், என் திறமைக்கு என்றாவது மதிப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த எனக்கு டிவி பாடல் நிகழ்ச்சி ஒன்றில் பாடும் வாய்ப்பு கிடைத்து. அதில் பல கட்டங்களை தாண்டி பல பாடல்களை பாடி முதல் இடத்தில் வெற்றி பெற்றேன். இந்த வெற்றி தான் என்னை சினிமா பாடகராக மாற்றியுள்ளது. சினிமாவில் முதன் முதலில் விவேக் - மெர்வின் இசையில் 'வடகறி' படத்தில் பாடினேன். பின், இமான் இசையமைத்த 'பஞ்சு மிட்டாய்', 'பாயும் புலி', 'ரஜினி முருகன்' படங்களில் பாடும் வாய்ப்பு கொடுத்தார்.
இமான், என்னைப் போன்ற வளரும் பாடகர்கள் பலரை அறிமுகம் செய்து ஒரு இசைச் சேவை செய்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். ஏ.ஆர்.ரஹ்மானின் 'நெஞ்சே எழு' இசை நிகழ்ச்சியில் நானும் பாடியிருக்கிறேன், அவரது இசையில் சினிமாவில் ஒரு பாடலாவது பாட வேண்டும் என்பதே என் லட்சியம்.
என் இசைச் சாதனைக்கு என் நண்பன் அரவிந்த் சீனிவாசன், சகோதரி ரிப்கா உறுதுணையாக இருந்து உதவுகின்றனர். இத்துடன் 'திவாகர் அன் பேண்ட்' என்ற இசை குழுவையும் நடத்தி வருகிறேன். தற்போது தமிழ் தவிர பிற மொழிப் படங்களிலும் பாடி வருகிறேன். ஒரு நல்ல பாடகராக ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்க வேண்டும் என்ற கொள்கையுடன் என் இசைப் பயணம் தொடர்கிறது, என்றார்.
facebook.com/www.singerdiwakar.com.in