ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ரஜினிகாந்த் சமீபத்தில்தான் 'கபாலி' படத்தில் தன்னுடைய நடிப்புப் பணியை நிறைவு செய்தார். சிறிய ஓய்விற்குப் பின் அவர் மீண்டும் ஷங்கர் இயக்கி வரும் '2.0' படத்தில் நடிக்க பிஸியாகிவிடுவார். சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் உயர்ந்த பிறகு ஒரே சமயத்தில் இரண்டு படங்களில் நடிப்பதை ரஜினிகாந்த் நிறுத்திக் கொண்டார். ஒரு படம் முடிந்த பிறகே அடுத்த படம் என்று அவர் நடித்து வந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'கபாலி, 2.0' என அவர் ஒரே சமயத்தில் இரண்டு படங்களில் நடித்து மீடியாக்களையும், ரசிகர்களையும் அவருடைய செய்திகளால் திக்கு முக்காட வைத்துவிட்டார்.
ரஜினிகாந்த் '2.0' படத்திற்குப் பிறகு என்ன படத்தில் நடிக்கப் போகிறார் என அவரது ரசிகர்களிடம் ஆர்வம் அதிகமாகி வருகிறது. கடந்த சில நாட்களாக மலையாளத்தில் மம்முட்டி நடித்த 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தின் தமிழில் ரீமேக்கில் ரஜினிகாந்த் நடிக்கப் போவதாக செய்திகள் பரவின. ஆனால், ரஜினிகாந்த் தரப்பிலிருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. '2.0' படம் முடியும் வரை ரஜினிகாந்த் வேறு எந்தப் படத்திலும் நடிக்க சம்மதம் தெரிவிக்க மாட்டார் என்றே தெரிகிறது.
சமீபத்தில் கூட பி.வாசு இயக்கி கன்னடத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் 'சிவலிங்கா' படத்தை ரஜினிகாந்த் பார்த்தாகச் சொன்னார்கள். பி.வாசு கன்னடத்தில் இயக்கி வெற்றி பெற்ற 'ஆப்த மித்ரா' படம்தான் பிறகு 'சந்திரமுகி'யாக தமிழில் ரஜினிகாந்த் நடிக்க சூப்பர் ஹிட்டானது. அதே போலவே 'சிவலிங்கா' படத்தையும் ரஜினிகாந்த் பார்த்தது உண்மை என்றால் அந்தப் படமும் ரஜினியின் '2.0' படத்திற்குப் பிறகான பட்டியலில் சேர்ந்தாலும் ஆச்சரியமில்லை.